Wednesday 26 April 2017

இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள் வெறும் 'வெட்டிப் பேச்சல்ல'

இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள்வெறும் 'வெட்டிப் பேச்சல்ல'











இந்நாட்டிலுள்ள இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக அன்று விதைக்கப்பட்ட கனவு இன்று நிஜமாக்கப்பட்டுள்ளது என பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக்  தெரிவித்தார்.

நாட்டின் 11ஆவது மலேசியத் திட்டம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும்போது இந்திய சமுதாயத்திகான வியூகச் செயல் வரைவுத்  திட்டம் (புளூபிரிண்ட்உருவாக்கப்படும் என்ற முடிவு எடுக்கப்பட்டது.




இந்திய சமுதாயத்திற்கான புளூபிரிண்ட் 11ஆம் தேதி மே மாதம் 2015இல் அறிவிக்கப்பட்டது. அன்று அறிவிக்கப்பட்ட இந்திய சமுதாயத்திற்கான 'கனவு திட்டம்' இன்று நிஜமாக்கப்பட்டுள்ளது.

இது ஒன்றும் 'வெட்டிப்  பேச்சல்ல'. மாறாக இது 'நிஜமானது'. இந்திய சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக தேசிய முன்னணி அரசாங்கம் முன்னெடுத்துள்ள வரைவு திட்டம் ஆகும் என டத்தோஸ்ரீ நஜிப் குறிப்பிட்டார்.

இன்று புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற வியூக வரைவுத் திட்டத்தை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கூறினார்.

No comments:

Post a Comment