Tuesday 26 November 2019

வர்த்தகத் துறையில் இந்தியப் பெண்களும் பங்காற்ற வேண்டும்- மாதவன் வலியுறுத்து

கினேஷ் ஜி

கிள்ளான்- 
இந்திய பெண்களியடையே வியாபாரம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரிக்கப்பட வேண்டும். இந்திய சமுதாயத்தின் பொருளாதார நிலை மேம்பாடு காண பெண்களும் வர்த்தகத் துறையில் ஈடுபடுத்தி கொள்ள வேண்டும் என்று சிலாங்கூர் மாநில திறன், புத்தாக்க கழகத்தின் தலைவர் மாதவன் வேலாயுதம் கூறினார்.
பெண்களும் வர்த்தகத் துறையில் ஈடுபட்டு தங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி கொள்வதற்கு ஏதுவாக இந்த பயிற்சி நடத்தப்படுகிறது.

சிறு தொழில்களை கற்றுக் கொள்வதன் மூலம் பெண்கள் வீட்டில் இருந்தவாறே எவ்வாறு வருமானம் ஈட்டிக் கொள்வது எனும் அடிப்படையில் பெண்களுக்கான விழா தட்டு அலங்கரிப்பு பயிற்சி நடத்தப்பட்டது.
பிறந்தநாள், திருமணம் உட்பட பல விழா காலங்களை நாம் கொண்டாடுகிறோம். இந்த விழாக்களில் முதன்மையாக இடம்பெறும் தட்டுகள் அலங்கரிப்பதுகூட சிறுதொழிலாக மாறுகின்ற நிலையில் இத்தகைய தொழில் துறைகளில் ஈடுபட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
அண்மையில் கிள்ளான் மாநகர் மன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் சித்தி மரியாவின் சிறப்பு அதிகாரி கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்கு நற்சான்றிதழ்களை வழங்கினார்.


No comments:

Post a Comment