Tuesday 5 November 2019

பிரதமர் பதவி அன்வாரிடமே ஒப்படைக்கப்படும்- துன் மகாதீர்

பேங்காக்-
தமக்கு பின்னர் பிரதமர் பதவியை பிகேஆர் கட்சியின் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஒப்படைப்பேன் என்று பிரதமர் துன் மகாதீர் மறுஉறுதிப்படுத்தியுள்ளார்.
வரும் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னரே பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக குறிப்பிட்ட அவர், அன்வாரிடம் அப்பதவி ஒப்படைக்கப்படுமே தவிர பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியிடம் அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆயினும் தாம் பதவி விலகும் தேதி இன்னமும்  நிர்ணயிக்கப்படாத நிலையில் தாம் செய்ய வேண்டிய கடமைகள் இன்னமும் உள்ளன. அந்த கடமைகள் நிறைவேறிய பின்னர் தாம் அப்பதவியிலிருந்து விலகுவதாக் அவர் அறிவித்தார்.

ADVERTISEMENT

No comments:

Post a Comment