Saturday 9 November 2019

ஸாகீர் நாய்க்கை அனுப்ப மாட்டோம் - இந்தியாவுக்கு விஸ்மா புத்ரா அதிகாரப்பூர்வ கடிதம்

கோலாலம்பூர்-
சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாக்கீர் நாய்க்கை சொந்த நாட்டுக்கு திரும்ப அனுப்புவதில்லை என்ற நிலைப்பாட்டில் புத்ராஜெயா உறுதியாக உள்ளது என்று விஸ்மா புத்ரா இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ கடிதம் அனுப்பும் என்று வெளியுறவு அமைச்சர் சைஃபுடின் அப்துல்லா தெரிவித்தார்.
இவ்விவகாரம் குறித்து சட்டத்துறை தலைவர் தோம்மி தோமஸிடம் விவரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
ஸாகீர் நாய்க்கை சொந்த நாட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று இந்தியா கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் ஏன் அனுப்ப முடியாது என்பதற்கு பிரதமர் துன் மகாதீர் பதிலளித்துள்ளார் என்று அவர் சொன்னார்.
Advertisement


No comments:

Post a Comment