Monday 4 November 2019

தேசிய நிலையிலான தீபாவளி உபசரிப்பை அரசாங்கம் நடத்தாதது ஏன்? டான்ஶ்ரீ விக்னேஸ்வரன் கேள்வி

கோ.பத்மஜோதி

கோலாலம்பூர்-
தேசிய நிலையிலான தீபாவளி பொது உபசரிப்பை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் இன்னும் நடத்தாதது ஏன்? என்று மஇகா தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பினார்.
கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது ஒவ்வோர் ஆண்டும் தீபாவளி பொது உபசரிப்பு நடத்தப்பட்டு வந்தது.

என் நாட்டின் மூன்றாவது பெரிய நமது இருக்கின்ற இந்தியர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களின் பெருநாள் கொண்டாத்தை தேசிய அளவில் அனுசரிப்பதை தேமு அரசாங்கம் ஒருபோதும் தவறவிட்டதில்லை.

ஆனால் பக்காத்தான் அரசாங்கம் இந்தியர்களுக்கு மதிப்பளிக்கிறதா? எனும் கேள்விக்குறி எழும் வகையில் தீபாவளி  முடிந்து ஒரு வாரம் கடந்த பின்னரும் தேசிய நிலையிலான தீபாவளி உபசரிப்பை பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் மேற்கொள்ளாதது ஏன்?

தீபாவளி பொது உபசரிப்பை பக்காத்தான் ஹராப்பான் நடத்தவில்லை என்பது முன்கூட்டியே  தெரிந்திருந்தால் மஇகாவின்  தீபாவளி உபசரிப்பு இன்னும் பெரிய அளவில் கொண்டாடி இருப்போம் என்று மஇகாவின் தீபாவளி பொது உபசரிப்பின்போது மேலவை தலைவருமான டான்ஶ்ரீ வின்கேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

No comments:

Post a Comment