Wednesday 13 November 2019

சிலாங்கூர் அரசின் இலவச குடிநீருக்கான விண்ணப்பப் பதிவு

சிப்பாங்-

மாதந்தோறும் வெ.4,000க்கும் குறைவான குடும்ப வருமானத்தை பெறும் குடும்பங்கள் சிலாங்கூர் மாநில அரசின் இலவச குடிநீர் திட்டத்திற்கான விண்ணப்பப் பாரங்களை பண்டார் பாரு சாலாக் திங்கி மக்கள் பூர்த்தி செய்தனர்.
அடுத்தாண்டு மார்ச் மாதம் அமலுக்கு வரும்  இத்திட்டத்திற்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்யும் வகையில்  அண்மையில் பண்டார் பாரு சாலாக் திங்கி மகா மாரியம்மன் ஆலயத்தில் மனுக்கள் விநியோகிக்கப்பட்டது.
இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இலவச குடிநீர் விண்ணப்பங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று சிலாங்கூர் மாநில தகவல் இலாகா இயக்குனர் தேவராஜ் சுப்பிரமணியம் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் விண்ணப்பங்களை பதிவு செய்து சிப்பாங் குடிநீர் வாரிய நிர்வாக அதிகாரி நிஜாமிடம் வழங்கினர்.
சுங்கை பிலே மலேசிய சமூக நம்பிக்கை இயக்கத்தின் தலைவர் பூ.அன்பரசு, விண்ணப்பப் பாரங்களை சரி பார்க்கும் பணியை சிறப்பாக செய்தார்.

Advertisement


No comments:

Post a Comment