Monday 18 November 2019

பக்காத்தான் கூட்டணிக்கு 'மரண அடி' கொடுத்துள்ள தேமு

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-
நேற்று நடைபெற்று முடிந்த தஞ்சோங் பியாய்  நாடாளுமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான்  கூட்டணிக்கு தேசிய முன்னணி 'மரண அடி' கொடுத்துள்ளது.
நடப்பு அரசாங்கத்தை ஆளும் அதிகாரத்தை கொண்டுள்ள பக்கத்தான் ஹராப்பான் கூட்டணி வேட்பாளரை 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடிக்கச் செய்துள்ளது தேசிய முன்னணி.

ஆட்சியாளும் அதிகாரம் கொண்ட போதிலும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒரு துணை அமைச்சராக பதவி வகித்த போதிலும் இத்தொகுதியை பக்காத்தான் கூட்டணி தற்காக தவறியுள்ளது உண்மையிலேயே இக்கூட்டணிக்கு விழுந்த முதல் அடியாகும்.

14ஆவது பொதுத் தேர்தலில் 80% மக்களின் நம்பிக்கையோடு ஆட்சி பிடித்த பக்கத்தான் கூட்டணியை  இந்த இடைத்தேர்தலில் மக்கள் வெகுவாக புறக்கணித்திருப்பது இரண்டாவது அடியாகும்.

முன்பெல்லாம் தேசிய முன்னணியும் மசீசவையும்  சாடிய மக்கள் இன்று அதே கூட்டணி வேட்பாளரை பெரும்பான்மை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்திருப்பது பக்கத்தான் கூட்டணிக்கு விழுந்த மூன்றாவது அடி ஆகும்.

இந்த இடைத்தேர்தலில் மக்கள் உண்மையான விருப்பத்தின் பேரில்தான் தேசிய முன்னணி வேட்பாளரை வெற்றிபெற செய்துள்ளார்களா? என்ற கேள்வி எழலாம். ஆனால் பக்கத்தான் அரசாங்கத்தின் மீதுள்ள வெறுப்பினாலலேயே தேசிய முன்னணி வேட்பாளரை வெற்றி பெறச் செய்துள்ளோம் என மக்கள் மண்டையில் உறைக்கும் படி மிகப்பெரிய தோல்வியை கொடுத்து பாடம் புகட்டியுள்ளனர்.

புறக்கணிக்கப்பட்ட ஒரு கட்சியை, கூட்டணியை மக்கள் மீண்டும் தலைதூக்க செய்துள்ளது ஒரு  ஆளும் அரசாங்கம் கொண்டுள்ள பலவீனத்தின் எச்சரிக்கையாகவே கருதமுடிகிறது.

எது எப்படியாயினும் இந்தத் தேர்தலை பொறுத்தவரைஃ தன்மீதான கரைகளையும் குற்றச்சாட்டுகளையும் துடைத்தெறிந்து மீண்டும் நம்பிக்கை நட்சத்திரமாக உலா வர தொடங்கியுள்ள தேசிய முன்னணி பக்கத்தான் கூட்டணிக்கு கொடுத்துள்ள 'மரண அடி'யாக இது அமைந்துள்ளது.

இந்த தோல்விகள் பாடம் கற்றுக்கொண்டு பக்கத்தான் கூட்டணி தன்னை சீர்திருத்திக் இல்லை என்றால் நிஜமாகவே இக்கூட்டணி 'மரணக்குழியில்' தள்ளப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை.

 பக்கத்தை நடப்பான் காலாவதி ஆகிவிடும் தூரம் வெகு தொலைவில் இல்லை

No comments:

Post a Comment