Tuesday 25 September 2018
கேரளாவை மீண்டும் கனமழை
புதுடில்லி :
வெள்ளத்தில் இருந்து மீண்டு நிம்மதியடைந்த கேரளாவில், சில மாவட்டங்களுக்கு மீண்டும் கனமழை எச்சரிக்கைக்கான "யெல்லோ அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.
செப்.25 மற்றும் 26 ஆகிய நாட்களில் 64.4 மில்லி மீட்டரில் இருந்து 124.4 மில்லி மீட்டர் வரை மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. குறிப்பாக நாளை கேரளாவின் பத்தினம்திட்டா, இடுக்கி, வயநாடு மாவட்டங்களுக்கு 2-ம் நிலை எச்சரிக்கையான யெல்லோ அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோல் நாளை மறுநாள் பாலக்காடு, இடுக்கி, திருச்சூர், மற்றும் வயநாடு மாவட்டங்களுக்கும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு அறிவுறுத்தியுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment