கோலாலம்பூர்-
பிரதமர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ முஹிடின் யாசினை விரட்டியடிக்கும் வரை தாம் ஓயப்போவதில்லை என்று முன்னாள் பிரதமர் துன் மகாதீர் சூளுரைத்துள்ளார்.
கடந்த தேர்தலில் தோற்கடிக்கப்பட்ம ஊழல் கட்சியை மீண்டும் ஆட்சியில் அமர வைத்துள்ள முஹிடினின் செயலை ஒருபோதும் மன்னிக்க மாட்டேன்.
கொல்லைப்புற வாயிலாக இன்று அரசாங்கத்தை அமைத்துள்ள டான்ஸ்ரீ முஹிடின் யாசின் அப்பதவியிலிருந்து விலக்கப்படும் வரை தாம் ஓயப்போவதில்லை என்று அவர் சொன்னார்.
கடந்த தேசிய முன்னணி ஆட்சியின்போது முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை நேரடியாகவே எதிர்த்த துன் மகாதீர், 14ஆவது பொதுத் தேர்தலில் தேமுவை தோற்கடித்து பிரதமர் பிதவியிலிருந்து நஜிப்பை விலக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Friday, 22 May 2020
மரணத்திலும் பிரியாத தம்பதியர்
பூச்சோங்-
மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சிலாங்கூர்,பூச்சோங்கைச் சேர்ந்த திருமதி ராதாவுக்கு நேற்றிரவு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தார் கணவர் குணசேகரன்.
ஆனால் சிகிச்சை பலனின்றி திருமதி ராதா மரணமடைந்தார்.
மனைவியின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த குணசேகரனுக்கும் நெஞ்சுவலி ஏற்பட சில மணிநேரங்களில் அவரும் உயிரிழந்தார்.
இவ்விருவரின் மரணமும் அவர்களின் குடும்பத்தினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மரணத்திலும் கூட பிரியாத தம்பதியர் என சமூக ஊடக பயனீட்டாளர்கள் சமூக ஊடகங்களில் தங்களது அனுதாபத்தை பகிர்ந்து வருகின்றனர்
மாரடைப்பின் காரணமாக மனைவியும் அவரை தொடர்ந்து கணவனும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
சிலாங்கூர்,பூச்சோங்கைச் சேர்ந்த திருமதி ராதாவுக்கு நேற்றிரவு நெஞ்சுவலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவரை மருத்துவமனையில் அனுமதித்தார் கணவர் குணசேகரன்.
ஆனால் சிகிச்சை பலனின்றி திருமதி ராதா மரணமடைந்தார்.
மனைவியின் மரணத்தால் அதிர்ச்சி அடைந்த குணசேகரனுக்கும் நெஞ்சுவலி ஏற்பட சில மணிநேரங்களில் அவரும் உயிரிழந்தார்.
இவ்விருவரின் மரணமும் அவர்களின் குடும்பத்தினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
மரணத்திலும் கூட பிரியாத தம்பதியர் என சமூக ஊடக பயனீட்டாளர்கள் சமூக ஊடகங்களில் தங்களது அனுதாபத்தை பகிர்ந்து வருகின்றனர்
Tuesday, 19 May 2020
ஜனநாயகத்தின் கேலிக்கூத்தே அரைநாள் நாடாளுமன்றக் கூட்டத்தொடர்- கணபதிராவ்
ரா.தங்கமணி
ஷா ஆலம்-
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் இன்றைய அரைநாள் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஜனநாயகத்தின் கேலிகூத்து என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வர்ணித்தார்.
மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை கவிழ்த்து சுயநலவாதிகளின் கூடாரமாக இன்றைய பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் திகழ்கிறது.
பிரதமாக நியமனம் செய்யப்பட்டுள்ள டான்ஸ்ரீ முஹிடினர யாசின் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியமாகும்.
ஆனால் தனக்கு பெரும்பான்மை இல்லாத்தால் அதனை தவிர்க்கும் பொருட்டு இரு வாரங்களுக்கு நடத்தப்பட வேண்டிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஒருநாள் நடத்தப்படுவதாக சொன்ன கூட்டத் தொடர் அரைநாள் மட்டுமே நடத்தப்படுவது ஜனநாயகத்தின் கேலிக்கூத்தாக அமைந்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
ஷா ஆலம்-
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் இன்றைய அரைநாள் நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஜனநாயகத்தின் கேலிகூத்து என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் வர்ணித்தார்.
மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுத்த அரசாங்கத்தை கவிழ்த்து சுயநலவாதிகளின் கூடாரமாக இன்றைய பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் திகழ்கிறது.
பிரதமாக நியமனம் செய்யப்பட்டுள்ள டான்ஸ்ரீ முஹிடினர யாசின் நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது அவசியமாகும்.
ஆனால் தனக்கு பெரும்பான்மை இல்லாத்தால் அதனை தவிர்க்கும் பொருட்டு இரு வாரங்களுக்கு நடத்தப்பட வேண்டிய நாடாளுமன்றக் கூட்டத் தொடர் தவிர்க்கப்பட்டுள்ளது.
ஒருநாள் நடத்தப்படுவதாக சொன்ன கூட்டத் தொடர் அரைநாள் மட்டுமே நடத்தப்படுவது ஜனநாயகத்தின் கேலிக்கூத்தாக அமைந்திருக்கிறது என்று அவர் குறிப்பிட்டார்.
Monday, 18 May 2020
அரசியல் ஆடுகளமாகும் நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டியெழுப்பிய துன் வீ.தி.சம்பந்தன்
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
மலேசிய நாடாளுமன்றம் இன்று வரலாறு காணாத சரித்திரத்தை படைக்கவுள்ளது.
பல்வேறு அரசியல் போராட்டங்கள், சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம், அணி தாவல் உட்பட வரலாற்றில் முதல் முறையாக இருமுறை பிரதமராக பதவி வகித்த துன் மகாதீர் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறார்.
இவ்வாறு பல்வேறு சுவாரஸ்யங்கள உள்ளடக்கிய நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் வேளையில் அந்த நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டியெழுப்பியவர் ஓர் இந்தியர் என்பதை நாம் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம்.
ஆம்... மஇகாவின் 5ஆவது தேசியத் தலைவர் துன் வீ.தி. சம்பந்தனையே அந்த புகழ் சாரும்.
1957இல் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த துன் வீ.தி.சம்பந்தன் பல்வேறு அமைச்சுகளில் பதவி வகித்தார்.
அவ்வாறு பொதுப்பணி அமைச்சராக தாம் பதவி வகித்தபோது இப்போது கம்பீரமாக வீற்றிருக்கும் நாடாளுமன்றக் கட்டடத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை ஏற்கிறார்.
1960இல் அதற்கான அடித்தளத்தை அமைக்கும் துன் வீ.தி.சம்பந்தன் 1962இல் நாடாளுமன்றக் கட்டடப் பணிகளை நிறைவு செய்கிறார்..
இந்த நாடாளுமன்றக் கட்டடத்தை அன்றைய மாமன்னர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இந்த நாடாளுமன்றக் கட்டடம் நிர்மாணிக்கப்படும் போது ஆட்சியில் இருத்தது பெரிக்காத்தான் கட்சி எனும் அம்னோ, மசீச, மஇகா ஆகியவற்ற்ஐ உள்ளடக்கிய கூட்டணி.
1969ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற கலவரம் மலேசிய வரலாற்றின் கறுப்பு அத்தியாயம் ஆகும்.
அதன் பின்னர் தேசிய முன்னனி கூட்டணி அமைக்கப்பட்டு கெராக்கான், பிபிபி போன்ற அன்றைய எதிர்க்கட்சிகளும் இக்கூட்டணியில் இணைக்கப்பட்டன.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி கடந்த பிப்ரவரி மாதம் கவிழ்க்கப்பட்டு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
பெரிக்காத்தான் கட்சி ஆண்டபோது கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டடத்தில் சுங்கை சிப்புட் மண்ணின் மைந்தனான துன் சம்பந்தன் மறைந்து இன்றோடு 41 ஆண்டுகள் நிறைவடையும் இன்றைய நாளில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சந்திக்கும் முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறுவது வரலாறுதான்.
துன் சம்பந்தனின் வரலாறு இதோடு மட்டும் நின்று போய்விடாது. தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் எனும் இந்தியர்களை தலைநிமிர்ந்து பார்க்கச் செய்யும் கூட்டுறவு சங்கத்தை தொடங்கி அதன் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் அழிக்கப்பட முடியாத சரித்திர நாயகனாக வாழ்ந்து மறைந்த துன் சம்பந்தனாரின் புகழை என்றும் மறவாமல் போற்றுவோம்.
வாழும் தேகம் மறைந்து போகலாம். ஆனால் படைத்த வரலாறு என்றும் மறைந்து போகாது. அவ்வாறான ஒரு வரலாறுதான் துன் வீ.தி.சம்பந்தன்.
(குறிப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்ற வரலாற்று தகவல்களை வழங்கியர் சுங்கை சிப்புட் கி.மணிமாறன்.)
கோலாலம்பூர்-
மலேசிய நாடாளுமன்றம் இன்று வரலாறு காணாத சரித்திரத்தை படைக்கவுள்ளது.
பல்வேறு அரசியல் போராட்டங்கள், சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம், அணி தாவல் உட்பட வரலாற்றில் முதல் முறையாக இருமுறை பிரதமராக பதவி வகித்த துன் மகாதீர் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் அமர்கிறார்.
இவ்வாறு பல்வேறு சுவாரஸ்யங்கள உள்ளடக்கிய நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறும் வேளையில் அந்த நாடாளுமன்றக் கட்டடத்தை கட்டியெழுப்பியவர் ஓர் இந்தியர் என்பதை நாம் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம்.
ஆம்... மஇகாவின் 5ஆவது தேசியத் தலைவர் துன் வீ.தி. சம்பந்தனையே அந்த புகழ் சாரும்.
1957இல் நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த துன் வீ.தி.சம்பந்தன் பல்வேறு அமைச்சுகளில் பதவி வகித்தார்.
அவ்வாறு பொதுப்பணி அமைச்சராக தாம் பதவி வகித்தபோது இப்போது கம்பீரமாக வீற்றிருக்கும் நாடாளுமன்றக் கட்டடத்தை நிர்மாணிக்கும் பொறுப்பை ஏற்கிறார்.
1960இல் அதற்கான அடித்தளத்தை அமைக்கும் துன் வீ.தி.சம்பந்தன் 1962இல் நாடாளுமன்றக் கட்டடப் பணிகளை நிறைவு செய்கிறார்..
இந்த நாடாளுமன்றக் கட்டடத்தை அன்றைய மாமன்னர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைத்தார்.
இந்த நாடாளுமன்றக் கட்டடம் நிர்மாணிக்கப்படும் போது ஆட்சியில் இருத்தது பெரிக்காத்தான் கட்சி எனும் அம்னோ, மசீச, மஇகா ஆகியவற்ற்ஐ உள்ளடக்கிய கூட்டணி.
1969ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்ற கலவரம் மலேசிய வரலாற்றின் கறுப்பு அத்தியாயம் ஆகும்.
அதன் பின்னர் தேசிய முன்னனி கூட்டணி அமைக்கப்பட்டு கெராக்கான், பிபிபி போன்ற அன்றைய எதிர்க்கட்சிகளும் இக்கூட்டணியில் இணைக்கப்பட்டன.
நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியில் அமர்ந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி கடந்த பிப்ரவரி மாதம் கவிழ்க்கப்பட்டு பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது.
பெரிக்காத்தான் கட்சி ஆண்டபோது கட்டப்பட்ட நாடாளுமன்றக் கட்டடத்தில் சுங்கை சிப்புட் மண்ணின் மைந்தனான துன் சம்பந்தன் மறைந்து இன்றோடு 41 ஆண்டுகள் நிறைவடையும் இன்றைய நாளில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி சந்திக்கும் முதலாவது நாடாளுமன்றக் கூட்டத் தொடர் நடைபெறுவது வரலாறுதான்.
துன் சம்பந்தனின் வரலாறு இதோடு மட்டும் நின்று போய்விடாது. தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் எனும் இந்தியர்களை தலைநிமிர்ந்து பார்க்கச் செய்யும் கூட்டுறவு சங்கத்தை தொடங்கி அதன் அசுர வளர்ச்சிக்கு வித்திட்டவர்.
மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் அழிக்கப்பட முடியாத சரித்திர நாயகனாக வாழ்ந்து மறைந்த துன் சம்பந்தனாரின் புகழை என்றும் மறவாமல் போற்றுவோம்.
வாழும் தேகம் மறைந்து போகலாம். ஆனால் படைத்த வரலாறு என்றும் மறைந்து போகாது. அவ்வாறான ஒரு வரலாறுதான் துன் வீ.தி.சம்பந்தன்.
(குறிப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்ற வரலாற்று தகவல்களை வழங்கியர் சுங்கை சிப்புட் கி.மணிமாறன்.)
இரண்டாவது முறை எம்பி பதவியை இழந்த முக்ரீஸ்
அலோர்ஸடார்-
கெடா மாநில மந்திரி பெசார் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ முக்ரீஸ் மகாதீர் பதவியிலிருந்து விலகினார்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கான ஆதரவை இரு பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் விலக்கிக் கொண்டதை அடுத்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
கெடா மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக பாஸ் கட்சியை சேர்ந்த முகமட் சனுஸி முகமட் நோர் புதிய மந்திரி பெசாராக பதவியேற்கவிருக்கிறார்.
மந்திரி பெசார் பதவியிலிருந்து முக்ரீஸ் மகாதீர் வீழ்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
ஏற்கெனவே டத்தோஸ்ரீ நஜிப்புடன் துன் மகாதீருக்கு ஏற்பட்ட பிணக்கு காரணமாக முக்ரீஸ் மந்திரி பெசார் பதவியை இழந்தார்.
கெடா மாநில மந்திரி பெசார் பதவியிலிருந்து டத்தோஸ்ரீ முக்ரீஸ் மகாதீர் பதவியிலிருந்து விலகினார்.
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கான ஆதரவை இரு பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் விலக்கிக் கொண்டதை அடுத்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி அமைக்கிறது.
கெடா மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக பாஸ் கட்சியை சேர்ந்த முகமட் சனுஸி முகமட் நோர் புதிய மந்திரி பெசாராக பதவியேற்கவிருக்கிறார்.
மந்திரி பெசார் பதவியிலிருந்து முக்ரீஸ் மகாதீர் வீழ்த்தப்படுவது இது இரண்டாவது முறையாகும்.
ஏற்கெனவே டத்தோஸ்ரீ நஜிப்புடன் துன் மகாதீருக்கு ஏற்பட்ட பிணக்கு காரணமாக முக்ரீஸ் மந்திரி பெசார் பதவியை இழந்தார்.
Friday, 15 May 2020
பிகேஆர்,ஜசெக கட்சிகள் இன்னுமா மகாதீரை நம்பிக் கொண்டிருக்கின்றன?
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு அச்சாரமாக திகழ்ந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீரை பிகேஆர், ஜசெக கட்சிகள் இன்னமும் நம்பிக் கொண்டிருப்பதன் மர்மம் என்ன? என்று மலேசியர்கள் விழிபிதுங்கி உள்ளனர்.
14ஆவது பொதுத் தேர்தலில் பெரும்பான்மை நாடாளுமன்றத் தொகுதிகளை வென்ற பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கடந்த ஈராண்டுகளாக ஆட்சி செய்தது.
பிரதமர் பதவி விவகாரத்தில் அக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த பெர்சத்து, பிகேஆர் ஆகிய கட்சித் தலைவர்களின் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பெரிக்காத்தான் நேஷன் கூட்டணி ஆட்சி அமைத்தது. அதன் பிரதமராக டான்ஶ்ரீ முஹிடின் யாசின் பதவி வகித்து வருகிறார்.
தேசிய முன்னணி ஆட்சியை கவிழ்த்து ஆட்சிக்கு வந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் துன் மகாதீர் ஆவார்.
துன் மகாதீர் நினைத்திருந்தால் ஷெராட்டன் ஹோட்டல் நாடகத்தை தவிர்த்திருந்தால், கூட்டணி ஆட்சிக்கு துரோகம் இழைக்கும் புல்லுருவிகளை களையெடுத்திருந்தால் இப்போது பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைத்திருக்காது.
எல்லா நாடகத்தையும் அரங்கேற்றி விட்டு இப்போது ஏதும் அறியாததுபோல் கபட வேடமிடும் துன் மகாதீடை இன்னமும் பிகேஆர், ஜசெக கட்சிகள் எப்படி நம்பிக் கொண்டிருக்கின்றன?
உண்மையை சொல்லப்போனால் துன் மகாதீருடன் இன்னமும் கூட்டணி வைத்திருப்பதை பிகேஆர், ஜசெகவின் அடிமட்ட உறுப்பினர்கள் துளியளவும் விரும்பவில்லை.
ஈராண்டுகளில் பிரதமர் பதவியை டத்தோஶ்ரீ அன்வாரிடம் ஒப்படைப்பதற்கு எத்தனை முறை அந்தர் பல்டி அடித்தார் என்பதை நாடே அறியும்.
இன்னமும் துன் மகாதீரையே பிகேஆர், ஜசெக கட்சிகள் நம்பிக் கொண்டிருந்தால் பக்காத்தான் ஹராப்பானுக்கும் அக்கட்சிகளுக்கும் என்றுமே எதிர்காலம் இல்லாமல் போகலாம்.
கோலாலம்பூர்-
பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு அச்சாரமாக திகழ்ந்த முன்னாள் பிரதமர் துன் மகாதீரை பிகேஆர், ஜசெக கட்சிகள் இன்னமும் நம்பிக் கொண்டிருப்பதன் மர்மம் என்ன? என்று மலேசியர்கள் விழிபிதுங்கி உள்ளனர்.
14ஆவது பொதுத் தேர்தலில் பெரும்பான்மை நாடாளுமன்றத் தொகுதிகளை வென்ற பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி கடந்த ஈராண்டுகளாக ஆட்சி செய்தது.
பிரதமர் பதவி விவகாரத்தில் அக்கூட்டணியில் இடம்பெற்றிருந்த பெர்சத்து, பிகேஆர் ஆகிய கட்சித் தலைவர்களின் மோதல் உச்சக்கட்டத்தை அடைந்த நிலையில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பெரிக்காத்தான் நேஷன் கூட்டணி ஆட்சி அமைத்தது. அதன் பிரதமராக டான்ஶ்ரீ முஹிடின் யாசின் பதவி வகித்து வருகிறார்.
தேசிய முன்னணி ஆட்சியை கவிழ்த்து ஆட்சிக்கு வந்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு முக்கிய காரணமாக திகழ்ந்தவர் துன் மகாதீர் ஆவார்.
துன் மகாதீர் நினைத்திருந்தால் ஷெராட்டன் ஹோட்டல் நாடகத்தை தவிர்த்திருந்தால், கூட்டணி ஆட்சிக்கு துரோகம் இழைக்கும் புல்லுருவிகளை களையெடுத்திருந்தால் இப்போது பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சியமைத்திருக்காது.
எல்லா நாடகத்தையும் அரங்கேற்றி விட்டு இப்போது ஏதும் அறியாததுபோல் கபட வேடமிடும் துன் மகாதீடை இன்னமும் பிகேஆர், ஜசெக கட்சிகள் எப்படி நம்பிக் கொண்டிருக்கின்றன?
உண்மையை சொல்லப்போனால் துன் மகாதீருடன் இன்னமும் கூட்டணி வைத்திருப்பதை பிகேஆர், ஜசெகவின் அடிமட்ட உறுப்பினர்கள் துளியளவும் விரும்பவில்லை.
ஈராண்டுகளில் பிரதமர் பதவியை டத்தோஶ்ரீ அன்வாரிடம் ஒப்படைப்பதற்கு எத்தனை முறை அந்தர் பல்டி அடித்தார் என்பதை நாடே அறியும்.
இன்னமும் துன் மகாதீரையே பிகேஆர், ஜசெக கட்சிகள் நம்பிக் கொண்டிருந்தால் பக்காத்தான் ஹராப்பானுக்கும் அக்கட்சிகளுக்கும் என்றுமே எதிர்காலம் இல்லாமல் போகலாம்.
மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகர் ஆகிறார் சிவசுப்பிரமணியம்?
ரா.தங்கமணி
ஈப்போ-
பக்காத்தான் ஹரப்பான் ஆட்சி கலைந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அமைத்துள்ள பேராக் மாநிலத்தில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் மாநில மந்திரி பெசாரின் ஆலோசகராக நியமனம் செய்படலாம் என்று நம்பப்படுகிறது.
அங்கு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் ஜசெகவிலிருந்து விலகிய சிவசுப்பிரமணியம் தன்னை சுயேட்சை வேட்பாளராக அறிவித்துக் கொண்டதோடு மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அஹ்மாட் பைசாலுக்கு ஆதரவு தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அரசில் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்படுக்கூடும் என அறியப்படுகிறது.
சிவசுப்பிரமணியம் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படாததற்கு பேரா மஇகாவின் எதிர்ப்பும் ஒரு காரணம் என தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இந்தியர் பிரதிநிதியாக சட்டமன்ற உறுப்பினர் யாரும் இல்லாத நிலையில் முன்னாள் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் மஇகாவைச் சேர்ந்த டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கம், டத்தோ வ.இளங்கோ ஆகியோரை சிறப்பு ஆலோசகராக நியமனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஈப்போ-
பக்காத்தான் ஹரப்பான் ஆட்சி கலைந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அமைத்துள்ள பேராக் மாநிலத்தில் புந்தோங் சட்டமன்ற உறுப்பினர் ஆதி.சிவசுப்பிரமணியம் மாநில மந்திரி பெசாரின் ஆலோசகராக நியமனம் செய்படலாம் என்று நம்பப்படுகிறது.
அங்கு நிகழ்ந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின்னர் ஜசெகவிலிருந்து விலகிய சிவசுப்பிரமணியம் தன்னை சுயேட்சை வேட்பாளராக அறிவித்துக் கொண்டதோடு மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அஹ்மாட் பைசாலுக்கு ஆதரவு தெரிவித்தார்.
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி அரசில் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் மந்திரி பெசாரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்கப்படுக்கூடும் என அறியப்படுகிறது.
சிவசுப்பிரமணியம் ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம் செய்யப்படாததற்கு பேரா மஇகாவின் எதிர்ப்பும் ஒரு காரணம் என தகவல்கள் கூறுகின்றன.
இதற்கு முந்தைய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இந்தியர் பிரதிநிதியாக சட்டமன்ற உறுப்பினர் யாரும் இல்லாத நிலையில் முன்னாள் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ ஸம்ரி அப்துல் காதீர் மஇகாவைச் சேர்ந்த டான்ஶ்ரீ எஸ்.வீரசிங்கம், டத்தோ வ.இளங்கோ ஆகியோரை சிறப்பு ஆலோசகராக நியமனம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் பிற்பகுதியில் இரண்டாம் கட்ட கோவிட்-19 அலை- எச்சரிக்கிறார் டாக்டர் நோர் ஹிஷாம்
புத்ராஜெயா-
ஜூன் மாதம் பிற்பகுதியில் இரண்டாம் கட்ட கோவிட்-19 அலை மலேசியாவில் ஏற்படக்கூடும் என்று சுகாதாரத்துறை தலைமை இயக்குனர் டத்தோ டாக்டர் நோர் ஹிஷாம் எச்சரித்தார்.
கோவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையில் சில தளர்வுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் கோவிட்-19 வைரசின் இரண்டாம் கட்ட அலை இன்னும் இரண்டு அல்லது நான்கு வாரங்களில் மலேசியாவில் மீண்டும் தலைதூக்க வாய்ப்புள்ளது.
தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள நிபந்தனைக்குட்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் செயல் நடமுறைகளை மக்கள் கடைபிடிக்கத் தவறினால் இரண்டாம் கட்ட கோவிட்-19 அலை மிகப் பெரிய பாதிப்பை கொண்டு வருவதோடு மீண்டும் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணை அமல்படுத்தப்படலாம் என்று கூறினார்.
Thursday, 14 May 2020
முக்ரீஸை விடாமல் துரத்தும் மகாதீரின் கர்மா
ரா.தங்கமணி
கோலாலம்பூர்-
'அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்' அது அந்த காலம்... 'அரசன் நின்று கொல்வான் தெய்வம் அன்றே கொல்லும்' இது இந்த காலம் என்ற திரைப்பட வசனத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம்
இந்த வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ நடப்பு சூழலில் முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு அச்சு அசலாக பொருந்துகிறது.
மிகுந்த எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் மக்கள் ஒரு மாற்றத்தை நோக்கி ஆட்சியில் அமர வைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு கவிழ்ந்த்தற்கு துன் மகாதீர் முதன்மை காரணியாவார்.
ஜனநாயகக் கோட்பாட்டில் அமையபெற்ற ஆட்சியை சுயநல அரசியலுக்காக பலர் தவறவிட்ட சூழலிலும் அதிகார மையமாக திகழ்ந்த மகாதீர் பக்காத்தான் ஹராப்பானை காப்பாற்றி இருக்கலாம்.
ஆனால் சுயநலவாதிகள் கூடாரத்தின் 'காட்ஃபாதராக' திகழும் மகாதீர், பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை காட்டிலும் தனது சுயநல அரசியலை மட்டுமே முன்னெடுத்தார்.
இப்படி தன்னை மட்டுமே சிந்தித்து மக்களை துச்சமாக மதித்தன் விளைவு பக்காத்தான் ஹராப்பான் கவிழ்ந்து பெரிக்காத்தான ஆட்சியில் அமர்ந்தது.
மக்களின் ஜனநாயக நம்பிக்கையை குழி தோண்டி புதைத்த மகாதீரின் 'கர்மா' சும்மா விட்டு விடுமா?
யாரை தன்னுடைய அரசியல் வாரிசாக கருதினாரோ அவரின் அரசியல் அஸ்திவாரத்தையே ஆட்டிபார்க்கும் வகையில் 'கர்மா' தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
கெடா மந்திரி பெசாராக பதவி வகித்த துற் மகாதீரின் புதல்வர் டத்தோஸ்ரீ முக்ரீஸ் மகாதீருக்கான ஆதரவை இரு பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதை அடுத்து அவரின் ஆட்சி கவிழ்ந்தது.
மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து அரசியலில் தான் மட்டுமே 'ராஜாதி ராஜனாக' உலா வர வேண்டும் என்ற மகாதீரின் கணக்கு இப்போது தப்புக் கணக்காகி போனது.
ஏற்கெனவே ஒருமுறை தேமுவுக்கு எதிரான மகாதீரின் நடவடிக்கைகளால் மந்திரி பெசார் பதவியை இழந்த முக்ரீஸ், தற்போதும் மகாதீர் செய்த தவறாலேயே மீண்டும் தண்டிக்கப்பட்டுள்ளார்.
முக்ரீஸை விடாமல் துரத்தும் மகாதீரின் 'கர்மா' அவரை அரசியலில் ஜொலிக்க விடுமா? பாதாளக்குழியில் தள்ளுமா?
கோலாலம்பூர்-
'அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்' அது அந்த காலம்... 'அரசன் நின்று கொல்வான் தெய்வம் அன்றே கொல்லும்' இது இந்த காலம் என்ற திரைப்பட வசனத்தை யாரும் மறந்திருக்க மாட்டோம்
இந்த வசனம் யாருக்கு பொருந்துமோ இல்லையோ நடப்பு சூழலில் முன்னாள் பிரதமர் துன் மகாதீருக்கு அச்சு அசலாக பொருந்துகிறது.
மிகுந்த எதிர்பார்ப்புடனும் நம்பிக்கையுடனும் மக்கள் ஒரு மாற்றத்தை நோக்கி ஆட்சியில் அமர வைத்த பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு கவிழ்ந்த்தற்கு துன் மகாதீர் முதன்மை காரணியாவார்.
ஜனநாயகக் கோட்பாட்டில் அமையபெற்ற ஆட்சியை சுயநல அரசியலுக்காக பலர் தவறவிட்ட சூழலிலும் அதிகார மையமாக திகழ்ந்த மகாதீர் பக்காத்தான் ஹராப்பானை காப்பாற்றி இருக்கலாம்.
ஆனால் சுயநலவாதிகள் கூடாரத்தின் 'காட்ஃபாதராக' திகழும் மகாதீர், பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியை காட்டிலும் தனது சுயநல அரசியலை மட்டுமே முன்னெடுத்தார்.
இப்படி தன்னை மட்டுமே சிந்தித்து மக்களை துச்சமாக மதித்தன் விளைவு பக்காத்தான் ஹராப்பான் கவிழ்ந்து பெரிக்காத்தான ஆட்சியில் அமர்ந்தது.
மக்களின் ஜனநாயக நம்பிக்கையை குழி தோண்டி புதைத்த மகாதீரின் 'கர்மா' சும்மா விட்டு விடுமா?
யாரை தன்னுடைய அரசியல் வாரிசாக கருதினாரோ அவரின் அரசியல் அஸ்திவாரத்தையே ஆட்டிபார்க்கும் வகையில் 'கர்மா' தனது ஆட்டத்தை தொடங்கியுள்ளது.
கெடா மந்திரி பெசாராக பதவி வகித்த துற் மகாதீரின் புதல்வர் டத்தோஸ்ரீ முக்ரீஸ் மகாதீருக்கான ஆதரவை இரு பிகேஆர் சட்டமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதை அடுத்து அவரின் ஆட்சி கவிழ்ந்தது.
மக்களின் நம்பிக்கையை சீர்குலைத்து அரசியலில் தான் மட்டுமே 'ராஜாதி ராஜனாக' உலா வர வேண்டும் என்ற மகாதீரின் கணக்கு இப்போது தப்புக் கணக்காகி போனது.
ஏற்கெனவே ஒருமுறை தேமுவுக்கு எதிரான மகாதீரின் நடவடிக்கைகளால் மந்திரி பெசார் பதவியை இழந்த முக்ரீஸ், தற்போதும் மகாதீர் செய்த தவறாலேயே மீண்டும் தண்டிக்கப்பட்டுள்ளார்.
முக்ரீஸை விடாமல் துரத்தும் மகாதீரின் 'கர்மா' அவரை அரசியலில் ஜொலிக்க விடுமா? பாதாளக்குழியில் தள்ளுமா?
Wednesday, 13 May 2020
உணவகங்களில் இனி அமர்ந்து உண்ணலாம்- மந்திரி பெசார்
ஷா ஆலம்-
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள உணவகங்களில் நாளை தொடங்கி அமர்ந்து உண்ணலாம் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உணவகங்களில் அமர்ந்து உண்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நாளை தொடங்கி உணவகங்கள் வழக்கம்போல் செயல்படலாம்.
காலை 7.00 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரையில் மட்டுமே உணவகங்கள் செயல்பட முடியும் என்பதோடு உணவகங்களுக்கு வெளியிலும் வாகன நிறுத்துமிடத்திலும் மேசைகளை போடக்கூடாது.
உணவகங்களுக்கென வரையறுக்கப்பட்டுள்ள செயல்முறைகளை உணவக உரிமையாளர்கள் பின்பற்றுகிறார்களா? என்பதை அதிகாரிகள் கண்காணிப்பர் என்று அவர் சொன்னார்.
சிலாங்கூர் மாநிலத்திலுள்ள உணவகங்களில் நாளை தொடங்கி அமர்ந்து உண்ணலாம் என்று மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் சாரி தெரிவித்தார்.
கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் உணவகங்களில் அமர்ந்து உண்பதற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் நாளை தொடங்கி உணவகங்கள் வழக்கம்போல் செயல்படலாம்.
காலை 7.00 மணி தொடங்கி இரவு 10.00 மணி வரையில் மட்டுமே உணவகங்கள் செயல்பட முடியும் என்பதோடு உணவகங்களுக்கு வெளியிலும் வாகன நிறுத்துமிடத்திலும் மேசைகளை போடக்கூடாது.
உணவகங்களுக்கென வரையறுக்கப்பட்டுள்ள செயல்முறைகளை உணவக உரிமையாளர்கள் பின்பற்றுகிறார்களா? என்பதை அதிகாரிகள் கண்காணிப்பர் என்று அவர் சொன்னார்.
திருடர்களின் கைவரிசையில் பாதித்த மூதாட்டி முனியம்மாவுக்கு வீரன் உதவி
தைப்பிங்-
கோவிட்-19 வைரஸ் தொற்றால் அமலாக்கம் செய்யப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு நேரத்தின்போது மூதாட்டி முனியம்மாவின் வீட்டுக்குள் 3 கொள்ளையர்கள் நுழைந்தனர்.
அம்மூதாட்டியை பாராங்கத்தி முனையில் மிரட்டி வீட்டிலிருந்த ரொக்கம், தங்க நகைகள், மின்சாரப் பொருட்கள் உட்பட மளிகைப் பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றனர்.
தைப்பிங்கில் நடந்த இச்சம்பவத்தினால் பெரும் பாதிப்புக்கு ஆளான மூதாட்டி முனியாம்மாவை நேரில் சந்திந்த மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் தைப்பிங் மாநகர் மன்ற உறுப்பினருமான மூ.வீரன் ஆறுதல் கூறியதோடு உடனடி தேவையாக மளிகைப் பொருட்களை கொடுத்து உதவினார்.
கோவிட்-19 வைரஸ் தொற்றால் அமலாக்கம் செய்யப்பட்ட நடமாட்ட கட்டுப்பாட்டு நேரத்தின்போது மூதாட்டி முனியம்மாவின் வீட்டுக்குள் 3 கொள்ளையர்கள் நுழைந்தனர்.
அம்மூதாட்டியை பாராங்கத்தி முனையில் மிரட்டி வீட்டிலிருந்த ரொக்கம், தங்க நகைகள், மின்சாரப் பொருட்கள் உட்பட மளிகைப் பொருட்களையும் கொள்ளையிட்டுச் சென்றனர்.
தைப்பிங்கில் நடந்த இச்சம்பவத்தினால் பெரும் பாதிப்புக்கு ஆளான மூதாட்டி முனியாம்மாவை நேரில் சந்திந்த மஇகா மத்திய செயலவை உறுப்பினரும் தைப்பிங் மாநகர் மன்ற உறுப்பினருமான மூ.வீரன் ஆறுதல் கூறியதோடு உடனடி தேவையாக மளிகைப் பொருட்களை கொடுத்து உதவினார்.
பெரும்பான்மை ஆதரவை பெற்ற பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்தது ஏன்? டத்தோஶ்ரீ தனேந்திரன் கேள்வி
பட்டர்வொர்த்-
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை அங்கீகரிக்க முடியாது என கூறும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகம்மது, பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பெரும்பான்மை வாக்குகளி ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டது ஏன் என்ற உண்மையை மக்களுக்கு விளக்குவார்களா? என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கேள்வி எழுப்பினார்.
பொதுத் தேர்தலில் வெற்றி பெறவில்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என காரணம் அடுக்கும் இவர்கள், பெரிக்காத்தான் நேஷனல் ஏன் ஆட்சியமைத்தது என்பதை ஆழமாக சிந்திக்க வேண்டும்.
ஷெரட்டன் ஹோட்டல் சம்பவத்திற்கு பின்னர் பிப்ரவரி 24ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து விலகினார் துன் மகாதீர். அவரின் பதவி விலகலுக்குப் பின்னரே பக்காத்தான் அரசாங்கம் கலைக்கப்பட்டது.
பிரதமர் பதவியிலிருந்து விலகிய துன் மகாதீர் விலகிய பின்னர் புதிய பிரதமரை நியமிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார் மாமன்னர். அரசியலமைப்பு சட்டவிதிகளின் படி தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய பிரதமராக டான்ஶ்ரீ முஹிடின் யாசினை மாமன்னர் நியமனம் செய்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றதாலேயே டான்ஶ்ரீ முஹிடின் யாசினை பிரதமராக நியமனம் செய்ய முடிந்தது.
டான்ஶ்ரீ முஹிடின் பிரதமராவதை விரும்பாத துன் மகாதீர் தனது பதவியை ராஜினாமா செய்தபோது நாடாளுமன்றத்தை கலைக்கும்படி மாமன்னரிடம் ஆலோசனை கூறினாரா?
நாடாளுமன்றத்தை கலைக்கும்படி மகாதீர் கூறியதாக இதுவரை எந்தவொரு செய்தியையும் நான் கேட்டது இல்லை.
அவ்வாறு ஒருவேளை மகாதீர் நாடாளுமன்றத்தை கலைக்கும்படி கோரியிருந்தாலும் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை அரசியலமைப்பு சட்டவிதிகளுக்கு உட்பட்டு மாமன்னர் பிரதமராக நியமித்திருக்க முடியும்.
இல்லையென்றால் நாட்டின் தற்போதைய கோவிட்-19 வைரஸ் தொற்றால் பொதுத் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லாத சூழல் எனும் நிலையில் புதிய பிரதமரை மானன்னர் நியமித்திருக்க கூடும்.
ஈராண்டுகால ஆட்சிக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி சொந்த கட்சியினராலே கவிழ்க்கப்பட்டதே தவிர வேறு யாராலும் அல்ல.
டான்ஶ்ரீ முஹிடின் யாசினின் பெரும்பான்மையை பொறுத்திருந்து பார்ப்போம். நாடாளுமன்றம் என்பது உங்களின் அரசியல் விளையாட்டு கூடமல்ல. அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக நாட்டையும் மக்களையும் பலிகடா ஆக்க வேண்டாம் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் வலியுறுத்தினார்.
பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தை அங்கீகரிக்க முடியாது என கூறும் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகம்மது, பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பெரும்பான்மை வாக்குகளி ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசு கவிழ்க்கப்பட்டது ஏன் என்ற உண்மையை மக்களுக்கு விளக்குவார்களா? என்று மலேசிய மக்கள் சக்தி கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் கேள்வி எழுப்பினார்.
பொதுத் தேர்தலில் வெற்றி பெறவில்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என காரணம் அடுக்கும் இவர்கள், பெரிக்காத்தான் நேஷனல் ஏன் ஆட்சியமைத்தது என்பதை ஆழமாக சிந்திக்க வேண்டும்.
ஷெரட்டன் ஹோட்டல் சம்பவத்திற்கு பின்னர் பிப்ரவரி 24ஆம் தேதி பிரதமர் பதவியிலிருந்து விலகினார் துன் மகாதீர். அவரின் பதவி விலகலுக்குப் பின்னரே பக்காத்தான் அரசாங்கம் கலைக்கப்பட்டது.
பிரதமர் பதவியிலிருந்து விலகிய துன் மகாதீர் விலகிய பின்னர் புதிய பிரதமரை நியமிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளானார் மாமன்னர். அரசியலமைப்பு சட்டவிதிகளின் படி தனது அதிகாரத்தை பயன்படுத்தி புதிய பிரதமராக டான்ஶ்ரீ முஹிடின் யாசினை மாமன்னர் நியமனம் செய்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவை பெற்றதாலேயே டான்ஶ்ரீ முஹிடின் யாசினை பிரதமராக நியமனம் செய்ய முடிந்தது.
டான்ஶ்ரீ முஹிடின் பிரதமராவதை விரும்பாத துன் மகாதீர் தனது பதவியை ராஜினாமா செய்தபோது நாடாளுமன்றத்தை கலைக்கும்படி மாமன்னரிடம் ஆலோசனை கூறினாரா?
நாடாளுமன்றத்தை கலைக்கும்படி மகாதீர் கூறியதாக இதுவரை எந்தவொரு செய்தியையும் நான் கேட்டது இல்லை.
அவ்வாறு ஒருவேளை மகாதீர் நாடாளுமன்றத்தை கலைக்கும்படி கோரியிருந்தாலும் அதிக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை கொண்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை அரசியலமைப்பு சட்டவிதிகளுக்கு உட்பட்டு மாமன்னர் பிரதமராக நியமித்திருக்க முடியும்.
இல்லையென்றால் நாட்டின் தற்போதைய கோவிட்-19 வைரஸ் தொற்றால் பொதுத் தேர்தல் நடத்துவது சாத்தியமில்லாத சூழல் எனும் நிலையில் புதிய பிரதமரை மானன்னர் நியமித்திருக்க கூடும்.
ஈராண்டுகால ஆட்சிக்குப் பின்னர் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஆட்சி சொந்த கட்சியினராலே கவிழ்க்கப்பட்டதே தவிர வேறு யாராலும் அல்ல.
டான்ஶ்ரீ முஹிடின் யாசினின் பெரும்பான்மையை பொறுத்திருந்து பார்ப்போம். நாடாளுமன்றம் என்பது உங்களின் அரசியல் விளையாட்டு கூடமல்ல. அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்பதற்காக நாட்டையும் மக்களையும் பலிகடா ஆக்க வேண்டாம் என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் வலியுறுத்தினார்.
முக்ரீஸுக்கான ஆதரவு வாபஸ்; கெடாவில் ஆட்சி கவிழ்ந்தது
அலோர் ஸ்டார்-
முக்ரீஸ் மகாதீரின் தலைமைத்துவத்திற்கான ஆதரவை இரு சட்டமன்ற உறுப்பினர்கள் விலக்கிக் கொண்டதை அடுத்து கெடாவில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்தது.
சிடாம் சட்டமன்ற உறுப்புனர் டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ, லூனாஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மான் நஸ்ருதீன் ஆகியோர் பிகேஆர் கட்சியை விட்டு விலகுவதாக இன்று அறிவித்தனர்.
பிரதமர் முஹிடின் யாசினை ஆதரிக்கிறோம் என கூறிய இவர்களின் முடிவால் கெடாவில் நீடித்து வந்த பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது.
முக்ரீஸ் மகாதீரின் தலைமைத்துவத்திற்கான ஆதரவை இரு சட்டமன்ற உறுப்பினர்கள் விலக்கிக் கொண்டதை அடுத்து கெடாவில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்தது.
சிடாம் சட்டமன்ற உறுப்புனர் டாக்டர் ராபர்ட் லிங் குய் ஈ, லூனாஸ் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மான் நஸ்ருதீன் ஆகியோர் பிகேஆர் கட்சியை விட்டு விலகுவதாக இன்று அறிவித்தனர்.
பிரதமர் முஹிடின் யாசினை ஆதரிக்கிறோம் என கூறிய இவர்களின் முடிவால் கெடாவில் நீடித்து வந்த பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிழ்ந்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி ஆட்சி அமைக்கவுள்ளது.
Subscribe to:
Posts (Atom)























