Thursday 4 March 2021

பாலத்தை மோதிய லோரி ஓட்டுனர் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளார்- போலீஸ்

பெட்டாலிங் ஜெயா- 

சுங்கை பீசி உலு கிளாங் நெடுஞ்சாலையில் கட்டுமானப் பணியில் இருந்த பாலம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் மாண்ட சம்பவம் தொடர்பில் அந்த பாலத்தை மோதி விபத்தை ஏற்படுத்திய லோரி ஓட்டுனர் ஷாபு வகை போதைப் பொருளை பயன்படுத்தியுள்ளார் என்று கோலாலம்பூர் சாலை போக்குவரத்து விசாரணை பிரிவுத் தலைவர் சூல்கிப்ளி யாஹ்யா தெரிவித்தார்.

நேற்று மாலை நிகழ்ந்த இந்த விபத்தில் விபத்துக்குள்ளான மூவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு நிலையில்  எவ்வித காயங்களும் ஏற்படாத லோரி ஓட்டுனர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

டாங் வாங்கி காவல் நிலையத்தில் லோரி ஓட்டுனர் சிறுநீர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அவர் போதைப்பொருளை பயன்படுத்தியுள்ளது கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.

அம்பாங்கிலிருந்து டிபிஎஸ் நோக்கி செல்லும் எம்ஆர்ஆர்2 நெடுஞ்சாலையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் பாலம் ஒன்றை லோரி மோதியதில் அதில் தொழிற்சாலை வேன் சிக்கிக் கொண்டது. இதில் இருவர் சம்பவ இடத்திலேயே மாண்டதோடு மூவர் படுகாயம் அடைந்தனர்.



No comments:

Post a Comment