Saturday 13 March 2021

பிகேஆர் கட்சியிலிருந்து விலகினார் சேவியர் ஜெயகுமார்

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர், அக்கட்சியின் உறுப்பினர் பதவிகளிலிருந்து டாக்டர் சேவியர் ஜெயகுமார் விலகினார்.


கோல லங்காட் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகிக்கும் சேவியர் ஜெயகுமார் தன்னை சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்துள்ளதோடு பிரதமர் டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு தரவிருப்பதாக சமூக வலைதளத்தில் உலா வரும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 2018ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் ஆட்சியை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் நீர்,நில, இயற்கை வள அமைச்சராக சேவியர் ஜெயகுமார் பதவி வகித்தார்.

அமைச்சராக பதவி வகித்தபோது அவர் ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒரு குற்றச்சாட்டு அணமைய காலமாக உலா வந்து கொண்டிருந்தது.

ஊழல் குற்றச்சாட்டின் தொடர்பில் சேவியர் ஜெயகுமாரின் உதவியாளர் என கூறப்படும் பேரா பிகேஆரைச் சேர்ந்த தினகரன், சேவியரின் உதவியாளர்  உதயசூரியன் உட்பட சிலரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் விசாரித்தது.

சேவியர் ஜெயகுமார் இந்த பதவி விலகல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

No comments:

Post a Comment