Tuesday 16 March 2021

பிகேஆருடன் அம்னோ ஒத்துழைப்பு?- தகவலை வெளியிடுகிறாரா அன்வார்?

 கோலாலம்பூர்-

வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் அம்னோவுடன் ஒத்துழைப்பது தொடர்பான தகவலை பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இன்று  வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


பெர்சத்து கட்சியின் மீது அம்னோவும் பிகேஆரும் அதிருப்தி கொண்டுள்ள நிலையில் வரும் தேர்தலில் பெர்சத்து ஓரம்கட்ட இவ்விரு கட்சிகளும் முடிவெடுத்துள்ளன.

அதன் அடிப்படையில் இவ்விரு கட்சிகளும் ஒன்றிணைந்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஆயுத்தமாகி வருவதாக ஆருடங்கள் வலுத்து வருகின்றன.

இன்று 4.30 மணியளவில் டத்தோஶ்ரீ அன்வார் வெளியிடும் தகவல் மலேசிய அரசியல் பிரளயத்தை ஏற்படுத்துமா?


No comments:

Post a Comment