Wednesday 31 March 2021

சுங்கை சிப்புட் தொகுதியை கோருவதா? மணிமாறன் ஆவேசம்

ரா.தங்கமணி 

சுங்கை சிப்புட் -

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுக்க வேணடும் என்ற. அம்னோ புத்ரி பிரிவின் கோரிக்கை அறிவிலித்தனமானது எனபதோடு அதனை சுங்கை சிப்புட் தொகுதி மஇகா கடுமையாக கருதுவதாகவும் அதன் செயலாளர் கி.மணிமாறன் தெரிவித்தார்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி மஇகாவின் பாரம்பரியத் தொகுதியாகும். மஇகாவின் முன்னாள் தலைவர்களான துன் வீ.தி. சம்பந்தன், துன் ச. சாமிவேலு ஆகியோர் இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பிர்களாக பதவி வகித்து உள்ளனர்.

தற்போது இத்தொகுதியை மஇகா மீண்டும் மீட்டெடுப்பதற்கு ஏதுவாக மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரனே நேரடி களத்தில் இறங்கியுள்ளார். அதுமட்டுமல்லாது இத்தொகுதியின் வேட்பாளர் நான் தான் என்பதை பலமுறை கூறியுள்ளார்.

நிலைமை இவ்வாறிருக்க அமனோவின் கோரிக்கை தேமுவின் உறுப்புக் கட்சிகளான அம்னோ- மஇகா இடையேயான நல்லுறவை பாதிக்கச் செய்யலாம்.

இவ்விவகாரம் குறித்து சுங்கை சிப்புட் தேமு தலைவர் டத்தோ சூல்கிப்ளியிடம் விளக்கம் பெற்றதாக கூறிய சுங்கை சிப்புட் தேமு செயலவை உறுப்பினருமான மணிமாறன், தொகுதி தேமு கூட்டத்தில் இவ்விவகாரம் குறித்து விவாதிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment