Wednesday 11 November 2020

கிராண்ட் ஆசியான் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது 'பரமபதம்'-விக்னேஷ் பிரபு

ரா.தங்கமணி

கோலாலம்பூர்- 

திரைக்கு வரும் முன்னே பல்வேறு விருதுகளை குவித்துள்ள ‘பரமபதம்; திரைப்படம்  கிராண்ட் ஆசியான் உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

மலேசியாவில் முதல் முறையாக பேண்டஸி  திரைப்படமாக உருவாகியுள்ள ‘பரமபதம்’ திரைப்படத்தை விக்னேஷ் பிரபு, தனேஷ் பிரபு சகோதரர்கள் இயக்கியுள்ளனர்.

திரையிடப்படுவதற்கு முன்பே  உலக அளவில் 34 போட்டிகளில்  பங்கேற்று 16 விருதுகளை தட்டிச் சென்றுள்ளது. இன்னும் இரு விருதுகளை பெறவில்லை. இந்நிலையில் IMDB (Internet Movie Data Base) நற்சான்றிதழை பெற்றுள்ள ‘பரமபதம்’ திரைப்படம்  மலேசிய சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றது என்று இயக்குனர் விக்னேஷ் பிரபு தெரிவித்தார்.

கிராண்ட் ஆசியான் நற்சான்றிதழ்

இந்நிலையில் இந்தியாவை தளமாகக் கொணடு செயல்படும் கிராண்ட் ஆசியா உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது. மிக பெரிய சாதனையாக கருதப்படும்  கின்னஸ் உலக சாதனை புத்தகத்தின் பிரிவின் கீழ் உள்ள இந்த கிராண்ட் ஆசியா உலக சாதனை புத்தகத்தில் 18 விருதுகளை வென்ற பேண்டஸி திரைப்படம் என இடம்பெற்றுள்ளது படக்குழுவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளதாக அவர் சொன்னார்.

Advertisement

மிக உயரிய விருதான ஆஸ்கார் விருதுக்கு அடுத்த நிலையிலான கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 26ஆம் தேதி திரையரங்கில் வெளியாகியிருக்க வேண்டிய  இத்திரைப்படம் கோவிட்-19 பாதிப்பு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டிருப்பதால் சரியான தருணத்திற்கு காத்துக் கொண்டிருக்கிறோம்.

இயக்குனர் விக்னேஷ் பிரபு

ரசிகர்களை நிச்சயம் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ‘பரமபதம்’ திரைப்படத்திற்கு மலேசியர்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று விக்னேஷ் பிரபு கேட்டுக்  கொண்டார்.

No comments:

Post a Comment