Sunday 4 October 2020

பெட்பேர்ட் தோட்டம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகளியர் குழு உதயம்

தஞ்சோங் சிப்பாட்-

பெட்போர்ட் தோட்டம் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் மகளியர் குழு புதியதாக உதயமானது.

ஆலய நிர்வாகத்திற்க்கு பக்க பலமாக செயல்ப்படவிருக்கும் இக்குழு ஆலய நிர்வாகத்தின் நேரடி பார்வையின் கீழ் திறன் கொண்டு செயல்படும் என்று ஆலயத்தலைவர் கு.வாசுதேவன் தெரிவித்தார்.

சமயம் சார்ந்த விவகாரங்கள்,கல்வி வகுப்புகள்,தேவார வகுப்புகள்,மகளியர் நல்வாழ்வு திட்டங்கள் என்று இந்த மகளியர் குழு குழந்தைகள் மற்றும் பெண்கள் விவகாரங்களை கையாளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கூடியவிரைவில் ஆலயத்தில் நடைபெறவிருக்கும் ஆலய திருப்பணிக்கும் இவர்களின் பங்கு அதிகமாக இருக்கும் என்று தாம் நம்புவதாகவும் தோட்டத்தை விட்டு சென்றவர்களை மீண்டும் தோட்ட ஆலய விழாவிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியிலும் இவர்களின் பங்கு அதிகமாக இருக்கும் என்று தாம் அதிகமாக நம்புவதாக ஆலய ஆலோசகர்களில் ஒருவரான பத்மாநாபன் அய்யனார் தெரிவித்தார்.

No comments:

Post a Comment