Friday 24 July 2020

வறுமைகோட்டில் வாழும் தாய்மார்களுக்கு ''கிஸ்'' அட்டைகள் வழங்கப்பட்டன

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
வறுமை நிலையில் வாழும்  தாய்மார்களின் குடும்பச் சுமையை குறைக்கும் வகையில் சிலாங்கூர் மாநில அரசு  அறிமுகப்படுத்திய கிஸ் திட்டத்தில் பதிந்து கொண்ட தகுதியானவர்களுக்கு கிஸ் அட்டைகளை சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் எடுத்து வழங்கினார். 
கோத்தா கெமுனிங் பகுதியில் பகுதியில் வசிக்கும் 18 வயதுக்கும் வயதுக்கும் குறைவான பிள்ளைகளை கொண்டுள்ள தனித்து வாழும் தாய்மார்கள் கிஸ் திட்டத்தில் பதிந்து கொண்ட நிலையில் அவர்களில் தகுதியானவர்களுக்கு கிஸ் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

தமது சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் வாயிலாக பதிந்து கொண்டவர்களில் 50 பேருக்கு இந்த கிஸ் அட்டைகள் புதிதாக வழங்கப்பட்டுள்ளன. 

தாய்மார்களின் சுமையை குறைக்கும் வகையில் அரசாங்கத்தினால் வழங்கப்படும் உதவியை பெறுபவர்கள் அதனை சிறந்த முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான கணபதிராவ் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி சேவை மையத்தில் கோவிட்-19 எஸ்ஓபி-பின்பற்றி  இந்த 50 பேருக்கும் இரு கட்டங்களாக கிஸ் அட்டைகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment