Wednesday 15 July 2020

மது அருந்தி வாகனம் செலுத்தினால் வெ.1 லட்சம் அபராதம்

கோலாலம்பூர்-
மது அருந்தி விட்டு வாகனமோட்டும் ஓட்டுனர்களுக்கு அதிகபட்சமாக 1 லட்சம் வெள்ளி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதா தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளது.

தற்போது நடப்பில் உள்ள இக்குற்றத்திற்கான  முதற்கட்ட அபராதத் தொகை 20,000 வெள்ளியிலிருந்து 1 லட்சமாக உயர்த்தப்படுவதோடு தொடர்ந்து இக்குற்றங்களை புரிபவருக்கு 150,000 வெள்ளி வரையிலும் அபராதம் விதிக்கப்படும் என்று இந்த சட்டத் திருத்தத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் வீ கா சியோங் தெரிவித்தார்.

அதோடு முதல் முறையாக குற்றம் புரிபவர்களுக்கு 15 ஆண்டுகால சிறையும் தொடர்ந்து குற்றம் இழைப்போருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்படுவதோடு அவர்களின் வானகமோட்டும் உரிமம் (லைசென்ஸ்) 10 ஆண்டுகளிலிருந்து 20 ஆண்டுகளுக்கு ரத்து செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment