Wednesday 27 March 2019

ஈப்போ நிருபர் சந்திரசேகர் காலமானார்

ஈப்போ-
தமிழ்ப் பத்திரிகை துறையில் நன்கு அறிமுகமான நிருபர் ப.சந்திரசேகர் இன்று தம்முடைய இல்லத்தில் காலமானார்.

25 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்ப்பத்திரிகை துறையில் பணியாற்றி வந்த சந்திரசேகர், தமிழ் நேசன், மலேசிய நண்பன் நாளிதழ்களில் பணியாற்றியிருப்பதோடு மக்கள், சமூக, அரசியல் தலைவர்களுடன் அணுக்கமான உறவை கொண்டிருந்தார்.

தமிழ் ஊடகத்துறையில் பல்வேறு விருதுகளை வென்றுள்ள சந்திரசேகரின் அகால மரணம் ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

No comments:

Post a Comment