Thursday 21 March 2019

காதலியுடன் தகராறு; தன்னைத் தானே கொளுத்திக் கொண்டார் இளைஞர்

லுமூட்-

காதலியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்திய இளைஞர் ஒருவர் தனக்கு தானே கொளுத்திக் கொண்ட சம்பவம் சித்தியவானில் அரங்கேறியுள்ளது.
21 வயது மதிக்கத்தக்க அவ்வாடவர் வீட்டின் வாகன நிறுத்துமிடத்தில் தன்னை தானே தீவைத்துக் கொண்ட சம்பவத்தில் 90 விழுக்காடு தீக்காயங்களுடன் மஞ்சோங் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று மஞ்சோங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஹனிப் ஒத்மான் தெரிவித்தார்.
அவ்வாடவர் தீயிட்டு கொள்ளும் காணொளி சமூக ஊடகங்களில் வைரலான வேளையில் அக்காணொளியில் உரையாடும் தரப்பினரின் உரையாடல்கள் ஆய்வுகுட்படுத்தப்படும் என்று அவர் சொன்னார்.


No comments:

Post a Comment