Tuesday 5 March 2019

புதிய கூட்டணிக்காக தேமுவிலிருந்து விலகிய மஇகா, மசீச

கோலாலம்பூர்-
அம்னோவினரின் இனவாத கருத்துகளால் அதிருப்தி அடைந்திருந்த மஇகா, மசீச ஆகிய கட்சிகள் புதிய கூட்டணியை உருவாக்குவதற்காக தேசிய முன்னணி கூட்டணியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளன.

மஇகாவின் தேசியத் தலைவர் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன், மசீச தலைவர் டத்தோஶ்ரீ வீ கா சியோன் ஆகிய இருவரும் இன்று விடுத்த கூட்டு அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.

அம்னோவினரிடையே நிலவும் இனவாதப் போக்கு தொடர்ந்து கொண்டிருப்பதால் தேசிய முன்னணி கூட்டணியில் நீடிப்பது சாத்தியமற்ற ஒன்றாக கருதப்படுகிறது. அதனால் இக்கூட்டணியிலிருந்து விலகி புதிய கூட்டணியை அமைக்கும் முயற்சியில் களமிறங்குவதாக இவ்விருவரும் தெரிவித்துள்ளனர்.

தேசிய முன்னணியின் தலைமைச் செயலாளர் டத்தோஶ்ரீ நஸ்ரி அஸிஸ் அண்மையில் தமிழ்ப்பள்ளி, சீனப்பள்ளிகள் குறித்தி இனவாத கருத்துகளை தெரிவித்ததன் எதிரொலியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

No comments:

Post a Comment