Monday 4 March 2019

இன, மதவாத அரசியலில் வெற்றி பெற்றுள்ளது தேமு- கணபதிராவ்


ரா.தங்கமணி

ஷா ஆலம்-
செமினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தேசிய முன்னணி அடைந்துள்ள வெற்றி அம்னோவின் இனவாதத்திற்கும் பாஸ்  கட்சியின் மதவாதத்திற்கும் கிடைத்த  வெற்றியாக கருதப்படுகிறது. அதே வேளையில் தேர்தல் நேரத்தின்போது நம்பிக்கை கூட்டணி வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததும் மக்களிடையே எழுந்த அதிருப்திக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

இனவாதம், மதவாதம் ஆகியவற்றை வைத்து அரசியல் செய்யும் அம்னோ,  பாஸ் கட்சிகள் இத்தேர்தலில் ஒன்றிணைந்ததால் இந்த வெற்றி கிட்டியுள்ளது.

இவ்விரு கட்சிகளும் இனவாதத்தை தூண்டிவிட்டு அதில் வெற்றியை நிலைநாட்டி கொண்டுள்ளன. ஆயினும் நம்பிக்கை கூட்டணி தனது தேர்தல் கொள்கை அறிக்கையில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை இன்றளவும் நிறைவேற்றப்பட்டது மக்களிடையே ஒருவித அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் நாம் ஒரு போதும் தவறக்கூடாது. அதை நிறைவேற்றுவதில் சாக்குப்போக்குகளை சொல்லக்கூடாது.

மக்கள் நம் மீதும் நாம் வழங்கிய வாக்குறுதிகள் மீதும் நம்பிக்கை வைத்துதான் 14ஆவது பொதுத்தேர்தலில் மத்திய, மாநில அரசுகளை ஆளும் அதிகாரத்தை வழங்கினர்.

மக்களுக்கு வணங்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான வாய்ப்புகளை தீர பரிசீலிக்க வேண்டுமே தவிர காரணங்களை அடுக்கிக்கொண்டே போகக்கூடாது.

மக்களின் அதிருப்தி அலை இன்னும் மோசமான சூழலை எட்டும் முன் அவர்களின் எதிர்பார்ப்புக்களையும் அபிலாஷைகளையும் நிறைவேற்ற வேண்டிய கடப்பாட்டை நம்பிக்கை கூட்டணி அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கணபதி ராவ் மேலும் தெரிவித்தார்.


No comments:

Post a Comment