Tuesday 30 March 2021

சுங்கை சிப்புட் தொகுதியை விட்டுக் கொடுங்கள் - அம்னோ புத்ரி கோரிக்கை

சுங்கை சிப்புட்-

மஇகாவின் பாரம்பரியத் தொகுதியான சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுக்கும்படி கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்று தவணைகளாக சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதியில் தோல்வி கண்டுள்ள மஇகா, வரும் 15ஆவது பொதுத் தேர்தலில் அத்தொகுதியை அம்னோவுக்கு விட்டுக் கொடுக்கும்படி சுங்கை சிப்புட்  அம்னோ புத்ரி  பிரிவுத் தலைவி நோராசுரா அப்துல் கரீம்  கோரிக்கை விடுத்துள்ளார்.

மஇகாவின் முன்னாள் தேசியத் தலைவர்களான துன் வீ.தி.சம்பந்தன், துன் ச.சாமிவேலு ஆகியோர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பதவி வகித்த இத்தொகுதி 2008ஆம் ஆண்டு முதல் எதிர்க்கட்சி வசமாகியுள்ளது.

2008 முதல் 2018 ஆம் ஆண்டு வரை டாக்டர் மைக்கல் ஜெயகுமாரும் 2018 முதல் எஸ்.கேசவனும் இத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தனர்.

No comments:

Post a Comment