Wednesday 3 March 2021

15ஆவது பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் புத்ராஜெயாவை கைப்பற்ற முடியுமா? ஜுலாவ் எம்பி

கோலாலம்பூர்- 

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவினால் வரும் பொதுத் தேர்தலில் புத்ராஜெயாவை கைப்பற்ற முடியாது என்று பிகேஆர்-இல் இருந்து விலகிய ஜுலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் லெர்ரி  தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் என உணர்வீர்களானால் நான் மீண்டும் பிகேஆரிலேயே இருந்திருப்பேன்? ஆனால் பக்காத்தான் ஹராப்பானிலிருந்து 10 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு புத்ராஜெயாவை கைப்பற்ற முடியாது.

எதிர்க்கட்சி கூட்டணி இப்போது பிளவுப்பட்டிருப்பதே இதற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டிய அவர், பெஜுவாங் தலைவர் துன் மகாதீர், பக்காத்தான் ஹராப்பான் தலைவர் அன்வார் இப்ராஹிம், வாரிசான் கட்சியின் தலைவர் ஷாபி அப்டால் ஆகியோரிடையே ஏற்பட்டுள்ள கருத்து மோதலே இந்த பிளவுக்கு காரணம் ஆகும் என்று அவர் சொன்னார்.

தொகுதி மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் எனும் எண்ணத்திலேயே கடந்த 28ஆம் தேதி  தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சோங்குடன் பிகேஆரில் இருந்து வெளியேறி பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதாக லெர்ரி தெரிவித்தார்.

No comments:

Post a Comment