Sunday 14 March 2021

தாமான் ஶ்ரீ மூடாவில் நவீன சந்தை- மந்திரி பெசார் திறந்து வைத்தார்

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

தாமான் ஶ்ரீ மூடா பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட நவீன சந்தையை சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார்.

300 வர்த்தக இடங்களை கொண்டுள்ள இந்த புதிய சந்தையில் உலர், ஈரமான பொருட்கள் உட்பட அத்தியாவசியப் பொருட்களும் விற்பனை செய்யப்படும்.

தற்போது தற்காலிகமாக சில வர்த்தக மையங்கள் செயலப்டுகின்றன. இன்னும் அதிகமான வர்த்தகங்கள் இங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கையை ஷா ஆலம் மாநகர் மன்றம் மேற்கொள்ளும் என்று அமிருடின் சாரி குறிப்பிட்டார்.

இந்நிலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள நவீன சந்தையில் வர்த்தகத்தை மேற்கொள்ள இந்தியர்கள் முன்வர வேண்டும்  என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

கோவிட்-19 பாதிப்பினால் பெரும்பாலானவர்கள் தங்களது தொழிலை இழந்து தவிக்கும் நிலையில் வர்த்தகத்தை மேற்கொள்ள நினைப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment