Thursday 18 March 2021

பேரம் பேசப்பட்ட எம்பி-க்கள் வாய் மூடி கிடந்தது ஏன்?

 ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்கும்படி நெருக்குதல் கொடுக்கப்பட்டதாக பிகேஆர் கட்சியின் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறிய குற்றச்சாட்டு தொடர்பில் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் திறக்காதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த 14ஆவது பொதுத் தேர்தலின்போது புத்ராஜெயாவை கைப்பற்றிய பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சி கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கவிழ்க்கப்பட்டது. அதன் பின்னர் பெரிக்காத்தான் நேஷனல் எனப்படும் பெர்சத்து, தேசிய முன்னணி, பாஸ் ஆகியவற்றின் கூட்டணியிலான அரசாங்கம் அமைக்கப்பட்டது.

சில மாதங்களுக்கு முன்பு பெரிக்காத்தான் நேஷனல அரசாங்கத்திற்கான ஆதரவை மீட்டுக் கொள்வதாக சில அம்னோ தலைவர்கள் கூறியிருந்த நிலையில் பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் பெரும்பான்மை கேள்விக்குறியாக்கப்பட்டது.

நாடாளுமன்றத்தில் தனது பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள பெரிக்காத்தான் நேஷனல் அரசு, சில நாடாளுமன்ற உறுப்பினர்களை மிரட்டுவதாகவும் பேரம் பேசப்படுவதாகவும் கூறப்பட்டு வந்தது.

பிகேஆர் கட்சியின் உதவித் தலைவராக பதவி வகித்த டாக்டர் சேவியர் ஜெயகுமார் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வந்த நிலையில் அண்மையில் பிகேஆரில் இருந்து விலகி பிரதமர் முஹிடின் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதாக கூறியிருந்தது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பான நிலையில் அந்த குற்றச்சாட்டுகளும் உண்மையாக இருக்கலாம் என்ற ஆருடமும் வலுத்து வந்தது.

இந்நிலையில் நேற்று முன்தினம் செய்தியாளர்களிடம் சந்தித்த டத்தோஶ்ரீ அன்வார், 5,6 எதிர்க்கட்சி எம்பி-க்கள் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுக்க பேரம் பேசப்படுவதாகவும் நெருக்குதல் கொடுக்கப்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார்.

உண்மையில் எதிர்க்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ‘பேரம்’ பேசப்பட்டார்கள் என்றால் ஏன் அது குறித்து அவர்கள் வாய் திறக்கவில்லை?, மக்கள் பிரதிநிதிகளான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே மற்றொருவர்தான் வாய் திறக்க வேண்டுமானால் இத்தகைய நாடாளுமன்ற உறுப்பினர்களா மக்களுக்காக குரல் கொடுப்பார்கள்? எனும் கேள்வி எழுந்துள்ளது.

தவறு நடப்பது தெரிந்தால் அதற்காக குரல் கொடுக்க வேண்டிய மக்கள் பிரதிநிதிகளே தங்களுக்கு எதிராக நடத்தப்படும் அநீதிக்கு குரல் கொடுக்காமல்ல் போனால் சாமானிய மக்களின் நிலை என்னவாவது?


No comments:

Post a Comment