Thursday 11 March 2021

சுமை ஏற்படுத்தாத வகையில் சொக்சோ சந்தா கட்டணம் உயர்த்தப்படலாம்- டத்தோஶ்ரீ சரவணன்

புத்ராஜெயா- 

மக்களுக்கு சுமை இல்லாத வகையில் தொழிலாளர் பாதுகாப்பு அமைப்பான சொக்சோ சந்தா தொகை அதிகரிப்பதற்கு மனிதவள அமைச்சு ஆராய்ந்து வருவதாக அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

கடந்த 1971ஆம் ஆண்டில் சொக்சோ அமைப்பு நிறுவப்பட்டபோது நிர்ணயிக்கப்பட்ட சந்தா தொகையே இப்போது வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் தொழிலாளர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கும் வகையில் சொக்சோ சந்தா தொகை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டு  வருகிறது. இது அனைத்துத் துறைகளையும் சார்ந்த தொழிலாளர்களையும் உட்படுத்தியதாக அமைந்திருக்கும் என்று மனிதவள அமைச்சுக்கும் கூட்டுறவு, தொழில் முனைவோர் மேம்பாட்டு அமைச்சுக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வின்போது செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஶ்ரீ சரவணன் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment