Wednesday 3 March 2021

மரியாதை நிமித்தமாக டத்தோஶ்ரீ சரவணனை சந்தித்தார் கணபதிராவ்

ரா.தங்கமணி

புத்ராஜெயா-

சிலாங்கூர் மாநில அரசின் மனதவளப் பிரிவின் ஆட்சிக்குழு உறுப்பினராக பொறுப்பேற்றுள்ள கணபதிராவ் வீரமன் மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணனை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

ஆளபலத் துறையில் சிலாங்கூர் மாநில அரசு மத்திய அரசாங்கத்துடன் இணைந்து ஓர் அணுக்கமான சூழலில் இணைந்து பணியாற்றும் வகையில் இந்த சந்திப்பு நேற்று புத்ராஜெயாவிலுள்ள மனிதவள அமைச்சில் நடைபெற்றது.

ஆள்பலத் துறையில் நிலவும் பல்வேறு சிக்கல்களுக்கு உரிய தீர்வு காணும் வகையில் மனிதவள அமைச்சருடன் இந்த சந்திப்பு மேற்கொள்ளப்பட்டதாக கணபதிராவ் தெரிவித்தார்.

இந்த சந்திப்பு நிகழ்வில் கோத்தா டாமான்சாரா சட்டமன்ற உறுப்பினர் ஸதிரி பின் மன்சோர், சிலாங்கூர் மாநில பொருளாதார திட்டமிடல் பிரிவின் (UPEN) துணை இயக்குனர் முகமட் ஹேஸா, கணபதிராவின் கொள்கை ஆலோசனை அதிகாரி ரா.ஆனந்த், கணபதிராவின் முதன்மை செயலாளர் குமாரி லோகேஸ்வரி, UPEN துணை உதவி இயக்குனர் ஷஃபிக், அமைச்சரின் அலுவலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment