Thursday 19 November 2020

ஜாலான் பங்சாரில் அடையாளம் காணப்படாத ஆடவரின் சடலம் மீட்பு

 கோலாலம்பூர்-

உடலில் பல்வேறு காயங்களுடன் காணப்பட்ட 30 வயதுக்குட்பட்ட ஆடவரின் சடலம் ஜாலான் பங்சாரின் கண்டெடுக்கப்பட்டது.

அதிகாலை 5.38 மணியளவில் சாலையோரத்தில் படுத்திருந்த நிலையில் காணப்பட்ட ஆடவரின் சடலம் இன்னும் அடையாளம் காணப்பட்டவில்லை என்று பிரீக்பீல்ஸ்ட் காவல் நிலைய தலைவர் ஸைருனிஸாம் முகமட் ஸைனுடின் தெரிவித்தார்.

பந்தாய் டாலாம் நோக்கி செல்லும் சாலையில் அசைவற்ற நிலையில் ஆடவர் கிடப்பதாக மலாய் ஆடவரிடமிருந்து போலீஸ் தகவலை பெற்றது. அவ்வாடவரிடம் எவ்வித அடையாள ஆவணங்களும் காணப்படவில்லை. கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டதால் அவ்வாடவர் உயிரிழந்திருக்கலாம். செக்‌ஷன் 302 குற்றவியல் சட்டத்தின் கீழ் இச்சமபவம் விசாரிக்கப்பட்டு வருகிறது என்று அவர் சொன்னார்

 இவ்விசாரணைக்கு உதவும் பொருட்டு தங்களது குடும்ப உறுப்பினர்கள் யாரேனும் காணவில்லையென்றால் 603-22979222 எனும் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி சவப்பரிசோதனைக்காக யூனிவர்சிட்டி மலாயா மருத்துவக் கழகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

No comments:

Post a Comment