Sunday 8 November 2020

பி40 பிரிவைச் சேர்ந்த 150 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் அன்பளிப்பு

ரா.தங்கமணி

ஷா ஆலம்- 

தீபாவளி பெருநாளை முன்னிட்டு பி40 பிரிவைச் சேர்ந்த குடும்பத்தினருக்கு உதவும் வகையில் அலாம் மெகா பகுதியைச் சேர்ந்த இந்திய சமூகத் தலைவர் கோபி 150 குடும்பத்தினருக்கு மளிகைப் பொருட்களை வழங்கினார்.

கோவிட்-19 வைரஸ் தொற்று அச்சுறுத்தலால் வருமானத்தை பெரும்பாலான இந்தியர்கள் இழந்துள்ளனர். இந்த நன்னாளில் அவர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்துக் கொள்ளும் வகையில் அவர்களுக்கு இந்த உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன என்று கோபி தெரிவித்தார்.

ஹைக்கோம், கம்போங் பாரு மண்டபத்திலும் அலாம் மெகா முத்து மாரியம்மன் ஆலயத்திலும் நடைபெற்ற இந்த அன்பளிப்பு நிகழ்வில் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் கலந்து கொண்டு உணவுப் பொட்டலங்களை எடுத்து வழங்கினார்.



இந்நிகழ்வு குறித்து பேசிய கணபதிராவ், தமது கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியின் உள்ள பி40 பிரிவைச் சேர்ந்த இந்தியர்களுக்கு உதவும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஷா ஆலம் நகராண்மைக் கழக உறுப்பினர்கள் ராய்டு, யுகராஜா, தர்மிஸி இந்திய சமூகத் தலைவர்கள் கோபி, பத்மநாதன், பொன்.சந்திரன் ஆகியோர் மளிகைப் பொருட்கள், பற்றுச்சீட்டுகள் ஆகியவற்றை வழங்கி வருகின்றனர்.

Advertisement

அதுமட்டுமல்லாது, இவ்வாண்டு மாநில அளவிலான தீபாவளி பொது உபசரிப்பு ரத்து செய்யப்பட்ட நிலையில் அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை கொண்டு 4,000 குடும்பங்களுக்கு மளிகைப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இவை இம்மாநிலத்திலுள்ள இந்திய சமூகத் தலைவர்களின் மூலம்  பி40 பிரிவினர் அடையாளம் காணப்பட்டு வழங்கப்படுகிறது.



இவ்வாண்டு தீபாவளி கொண்டாட்டத்தை மிகவும் பாதுகாப்பான முறையில் கொண்டாடுவது அவசியமானது ஆகும் என்று கணபதிராவ் மேலும் சொன்னார்.



இந்த நிகழ்வின்போது அலாம் மெகா கிராமத் தலைவர் ஹாஜி மாலிக், ஷா ஆலம் நகராண்மைக் கழக உறுப்பினர் தர்மிஸி, இந்திய சமூகத் தலைவர் பத்மநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment