Friday 6 November 2020

தாய்மொழிப்பள்ளிகளுக்கு நிதி ஒதுக்காத 2021 பட்ஜெட்- புறக்கணிப்பின் படலமா?

ரா.தங்கமணி

கோலாலம்பூர்-

2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் (பட்ஜெட் 2021) இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில்  தாய்மொழி பள்ளிகளுக்கான மானிய ஒதுக்கீடு விவரிக்கப்படாதது பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்தின் மீதான நடுநிலைப்போக்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.

கோப்புப் படம்

நிதியமைச்சர் தெங்கு ஷஃப்ருல் இன்று அறிவித்த பட்ஜெட்டில் கல்வித்துறைக்கு 5,040 கோடி வெள்ளி  ஒதுக்கீடு செய்வதாக அறிவித்தார். ஆனால் இதில் எத்தனை கோடி வெள்ளி தாய்மொழிப் பள்ளிகளுக்கு ஒதுக்கப்படவுள்ளது என்ற விவரத்தை அறிவிக்கவில்லை.

முந்தைய தேசிய முன்னணி, பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கம் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில் தேசியப் பள்ளி, சீனப்பள்ளி, தமிழ்ப்பள்ளி,  சமயப்பள்ளி என நிதி ஒதுக்கீடு விவரிக்கப்படும்.

கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்தே முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் தாக்கல் செய்த பட்ஜெட்டில் தமிழ், சீனப்பள்ளிகளுக்கு தலா 50 மில்லியன் வெள்ளி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது.

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் கூட தனியார் சீன இடைநிலைபள்ளிகளுக்கு 2019 பட்ஜெட்டில் வெ.12 மில்லியன், 2020 பட்ஜெட்டில் வெ. 20 மில்லியன் ஒதுக்கப்பட்ட நிலையில் 2021 பட்ஜெட்டில் ஒரு காசை கூட ஒதுக்கீடு செய்யப்படாதது சீன சமூகத்தை பிரதிநிதிக்கும் அரசியல் தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment