Sunday 8 November 2020

ஷா ஆலம் நிர்வணா நினைவுப் பூங்காவில் துப்புரவுப் பணி

 ரா.தங்கமணி

ஷா ஆலம்-

தீபாவளி பெருநாள் கொண்டாட்டத்திற்கு இன்னும் சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் தங்களது முன்னோர்களை வழிபாடு செய்வது இந்துக்களின் முதன்மை கடமையாகும். அவ்வகையில் மரணித்து விட்ட தங்களது உறவுகளை நினைவுக் கொள்ளும் வகையில் தீபாவளி பெருநாளின் முதல் நாளன்று கல்லறை வழிபாட்டை இந்துக்கள்  மேற்கொள்வர்.

அதன்  அடிப்படையில் இங்கு  ஷா ஆலம், செக்‌ஷன் 21இல் உள்ள நிர்வணா நினைவு பூங்காவில் இந்துக்கள் துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

6ஆவது ஆண்டாக மேற்கொள்ளப்படும்  இந்த துப்புரவுப் பணி  சிலாங்கூர் கைலாசம் சமூகநல இயக்கம் (ஷா ஆலம் கைலாசம் காஸ்கேட்), சிலாங்கூர் மில்லினியம் சமூகநல இயக்கம், சிலாங்கூர் இந்திய சமூகநல சங்கம், சாய் சிவம் காஸ்கேட் இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் இந்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது.

கடந்த 5 ஆண்டுகளாக இந்த துப்புரவுப் பணியை 3 இயக்கங்கள் முன்னெடுத்து வந்த நிலையில் தற்போது சாய் சிவம் காஸ்கேட் இயக்கம் தம்முடன் இணைந்து தோள் கொடுத்தது என்று சிலாங்கூர் மில்லினியம் சமூகநல இயக்கத்தின் தலைவர் டத்தோஶ்ரீ கே.சரவணன் தெரிவித்தார்.

மரணத்திற்கு பின்னர் துயில் கொள்கின்ற இந்த நினைவுப் பூங்காவில் இந்துக்கள் தங்களது உறவுகளை வழிபடுவதற்கு ஏதுவாக  இந்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது என்று அவர் சொன்னார்.

தீபாவளி காலகட்டத்தில்  மட்டுமல்லாது பிற நாட்களிலும் தங்களது உறவுகள் துயில் கொள்கின்ற நினைவுப் பூங்காக்களில் துப்புரவுப் பணி மேற்கொள்வது அவசியம் என்று டத்தோஶ்ரீ கே.சரவணன், சிலாங்கூர் கைலாசம் சமூகநல இயக்கத்தின் தலைவர் குனேந்திரன் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த துப்புரவுப் பணியில் கோலசிலாங்கூர் புக்கிட் மெலாவத்தி சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த ஷோபா செல்வராஜு, ஷா ஆலம் நகராண்மைக் கழக உறுப்பினர் எஸ்பி சரவணன் செல்வராஜு, சிலாங்கூர் இந்திய சமூகநல சங்கத்தின் தலைவர் தினாகரன்,  சாய் சிவம் காஸ்கேட் இயக்கத்தின் பன்னீர், பத்மா,உட்பட பொதுமக்களும் பங்கேற்றனர்.


No comments:

Post a Comment