Saturday 26 December 2020

15ஆவது பொதுத் தேர்தலை முன்னிறுத்திய தீர்மானங்களோடு மலேசிய மக்கள் சக்தி மாநாடு- டத்தோஶ்ரீ தனேந்திரன்

கோலாலம்பூர்- 
மலேசிய மக்கள் சக்தி கட்சியின் 12ஆவது  தேசிய பேராளர் மாநாடு நாளை 10.30 மணிக்கு நீலாயிலுள்ள டிவிசி லிட்டல் சென்னை மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்த தேசிய பேராளர் மாநாட்டை தேசிய முன்னணியின் துணைத் தலைவர் டத்தோ முகமட் ஹஸான் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கும் வேளையில் முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் சிறப்பு வருகை புரியவுள்ளார் என்று அக்கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ ஆர்.எஸ்.தனேந்திரன் தெரிவித்தார்.

15ஆவது பொதுத் தேர்தலை முன்னிறுத்தி இந்த பேராளர் மாநாட்டில் சில முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன. மேலும் 15ஆவது பொதுத் தேர்தலுக்கு தயாராகும் வகையில் சிறப்பு பணிக்குழு நாளைய மாநாட்டில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

கொவிட்-19 வைரஸ் பரவல் காரணமாக எஸ்ஓபி நடைமுறைகளை பின்பற்றி புதிய அணுகுமுறையில் பேராளர் மாநாடு நடத்தப்படவுள்ளது என்று டத்தோஶ்ரீ தனேந்திரன் கூறினார்.

No comments:

Post a Comment