Wednesday 15 January 2020

மாற்றத்தை நோக்கி பயணிப்போம்- கணபதிராவ் வாழ்த்து

ஷா ஆலம்-

பொங்கல் உழவர் திருநாள் மட்டுமின்றி இந்துக்களின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் உணர்த்துகின்ற பெருநாள். இந்த இனிய நாள் இந்துக்களின் வாழ்வில் ஏற்றத்தை கொண்டு வரும் திருநாளாக கொண்டாடி மகிழ்வோம் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

பொங்கலுக்கு முன்னதாக கொண்டாடப்படும் போகி பண்டிகை பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற கோட்பாட்டை வலியுறுத்துகிறது. பழையன கழிதல் என்பது நமது இல்லங்களில் உள்ள பழைய பொருட்களை குறிப்பிடுவதல்ல. நமது எண்ணத்திலும் சிந்தனையிலும் பழைய சித்தாந்தங்களும் எதிர்மறையான எண்ணங்களை விலக்கி ஆக்ககரமான சிந்தனையும் தெளிவும் பெற வேண்டும் என்பதை உணர்த்துகிறது.


சாதிக்க துடிக்கும் ஒவ்வோரு மனிதனுக்கான ஒரு பொன் விழா. பால் பொங்குவதுப்போல் எண்ணங்கள் பொங்கி, சிந்தனைகள் பொங்கி வெற்றி என்னும் பொங்கலை அனைவரும் இணைந்து பகிர்ந்து உண்போம்..

நாளுக்கு நாள் விஞ்ஞானம் வளர்ந்துக்கொண்டு இருக்கின்றது,நாளுக்கு நாள் நாடும் மாற்றம் காண்கின்றது.நாமும் மாற்றங்களை நோக்கி பயணிப்போம். கல்வி,பொருளாதாரம் இந்த இரண்டும் நம் இரு கண்களை போல் நினைத்து வாழ்வில் வெற்றி பெற உழைத்திடுவோம் என்று பொங்கல் வாழ்த்துச் செய்தியில் கணபதிராவ் குறிப்பிட்டார்.



No comments:

Post a Comment