Sunday 5 January 2020

ஜாவி அமலாக்கத்திற்கு எதிராக பெற்றோர்கள் அணி திரள வேண்டும்

ஷா ஆலம்-
தாய்மொழிப் பள்ளிகளில் அமல்படுத்தப்படவுள்ள ஜாவி மொழி பாடத்திட்டத்தை பெற்றோர்கள் கடுமையாக எதிர்க்க வேண்டும் என்று ஸ்ரீமூடா வட்டார இந்திய சமூகத் தலைவர் பத்மநாதன் வலியுறுத்தினார்.
நான்காம் ஆண்டு மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்திற்கு இந்திய, சீன சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஜாவி மொழி அமலாக்கத்தை கடுமையாக எதிர்க்கும் வண்ணம் பெற்றோரும் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்கமும் அதற்கு எதிராட நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும்.
தாய்மொழிப் பள்ளிகளில் ஜாவி திணிக்கப்படுவதற்கு எதிராக பெற்றோர்கள் அணிவகுக்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

சிலாங்கூர் மாநில சமூக மேம்பாட்டு இயக்கம், கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி ஆகியவற்றின் இணை ஏற்பாட்டில் 'மீண்டும் பள்ளிக்கு போகலாம்' நிகழ்ச்சியின் வழி 50 சிறார்களுக்கு புத்தகப்பை, புத்தகங்கள் ஆகியவற்றை பத்மநாதன் வழங்கினார்.
இந்த நிகழ்வில் இந்திய சமூகத் தலைவர் பொன்.சந்திரன்,  மைசெல் அதிகாரிகள் திருமதி சாந்தா, ரகுபதி, கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி அலுவலர் ரா.தங்கமணி  ஆகியோர் கலந்து கொண்டு சிறார்களுக்கு புத்தகப்பைகளை வழங்கினர்.

No comments:

Post a Comment