Wednesday 14 July 2021

சிம்பாங் லீமா மின்சுடலையின் தகன இயந்திரம் பழுதுபார்க்க நடவடிக்கை- கணபதிராவ்


 ஷா ஆலம்-

கிள்ளான் சிம்பாங் லீமா மின்சுடலையில் பழுதடைந்திருக்கும் தகன இயந்திரத்தை சரி செய்வதற்கு மாநில அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி  இருப்பதாக சிலாங்கூர் மாநில  ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் தெரிவித்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கிள்ளான், ஷா ஆலம் மாவட்டங்களில் அதிகரித்து காணப்படுவதோடு அதனால் மரணமடைவோரின் எண்ணிக்கையும் அண்மைய காலமாக அதிரித்து காணப்படுகிறது.

சிம்பாங் லீமா மின்சுடலையில் ஒரு தகன இயந்திரம் பழுதடைந்து கிடப்பதால் சடலங்களை தகனம் செய்வதில் காலதாமதம் ஏற்படுவதோடு அது மரணமடைந்தோரின் குடும்பத்தினரையும் அசெளகரியத்திற்கு ஆளாக்குகிறது.

இவ்விவகாரம் இன்றைய ஆட்சிக்குழு கூட்டத்தில் மந்திரி பெசார் டத்தோஶ்ரீ அமிருடின் சாரி கவனத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டதோடு இதற்கு உரிய தீர்வை மாநில அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினேன்.

இதனிடையே, மாநில அரசாங்க செயலாளருடன் தொடர்பு கொண்ட மந்திரி பெசார் கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் கீழ் இயங்கும் சிம்பாங் லீமா மின்சுடலை தகன இயந்திரத்தை பழுதுபார்க்கும் நடவடிக்கை எடுக்கப்படி கேட்டுக் கொண்டதாகவும் கணபதிராவ் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment