Thursday 8 July 2021

பிஎன் அரசுக்கான ஆதரவை மீட்டுக் கொண்டது அம்னோ

கோலாலம்பூர்-

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கு வழங்கி வந்த ஆதரவை மீட்டுக் கொள்வதாக அம்னோ இன்று அறிவித்துள்ளது. 

நேற்று நடைபெற்ற அம்னோ உயர்மட்டக்குழு கூட்டத்தில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ ஸாயிட் ஹமிடி அறிவித்தார். 

கோவிட்-19 வைரஸ் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதாலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

பிரதமர் பதவியிலிருந்து டான்ஸ்ரீ முஹிடின் யாசின் விலக வேண்டும் எனவும் புதியவர் ஒருவர் பிரதமராக பதவியேற்க வழிவிட வேண்டும் எனவும் ஸாயிட் ஹமிடி குறிப்பிட்டார். 

No comments:

Post a Comment