Saturday 10 July 2021

இனம், மதங்களை கடந்து உதவி நலத்திட்டம்

ஈப்போ-

கோவிட்-19 பெருந்தொற்றின் காரணமாக விதிக்கப்பட்டுள்ள நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையினால் வேலையிழந்து வருமானம் இழந்து தவிக்கும் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டி வருகிறது மலேசிய இந்திய இளைஞர் மன்றத்தின் தம்புன் கிளை.

வருமானம் இழந்து தவிப்பவர்கள் பசியில் வாடி விடக்கூடாது எனும் நோக்கில் உணவுப் பொட்டலங்களை வழங்கும் நடவடிக்கையை முன்னெடுத்துக் கொண்டிருப்பதாக அதன் தலைவர் தினேஸ் காளியப்பன் கூறினார்.

இனம், மதங்களை கடந்து முதியவர்கள், மாற்றுத் திறனாளிகள் உட்பட வருமானம் இன்றி தவிப்பவர்களுக்கு தமது குழு உதவிக்கரம் நீட்டி வருகிறது. அதன் முதற்கட்டமாக 10 குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன என்று அவர் சொன்னார்.

No comments:

Post a Comment