Wednesday 14 July 2021

டான்ஶ்ரீ முஹிடினை ஆதரிக்கும் அம்னோ எம்.பி.க்கள்

கோலாலம்பூர்-

பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கத்திற்கான ஆதரவை அம்னோ வாபஸ் பெற்று ஒரு வாரம் நெருங்கும் நிலையில்  டான்ஶ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான அரசாங்கம் கவிழாமல் இருப்பதற்கு அமைச்சரவை உட்பட அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமருக்கு ஆதரவாக இருப்பதுதான் காரணமாக உள்ளது.

அம்னோ நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள வேளையில் இன்னும் பலர் அவர்களின் ஆதரவாளராக உள்ளனர்.

அதோடு கோவிட்-19 பெருந்தொற்றிலிருந்து நாட்டை மீட்டெடுக்கும் அரசாங்கத்தின் முயற்சிக்கு வலு சேர்க்கும் வகையில் அம்னோ ஆதரவாளர்கள் இருப்பதால் பெரிக்காத்தான் நேஷனல் அரசாங்கம் இன்னமும் வலுவாக உள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன.

No comments:

Post a Comment