Sunday 1 September 2019

வரலாற்று கறுப்பு அத்தியாயத்தின் முன்னுரையே 'சுதந்திரம்'

ஆக்கம்: கி: மணிமாறன்

'மெர்டேக்கா..... மெர்டேக்கா......மெர்டேக்கா.....'

ஆகஸ்ட் 31... இன்று அனைத்து மலேசியர்களின் தாரக மந்திரமாக திகழ்கிறது 'மெர்டேக்கா' எனும் வாசகம். இது வெறும் வாசகம் அல்ல. ஆதிக்ககாரர்களின் பிடியிலிருந்து விடுபட்டு சுதந்திர காற்றை சுவாசிக்க விரும்பிய நமது முன்னோர்களின் கறுப்பு அத்தியாயத்தை பதிவு செய்துள்ள கறை படிந்த வரலாற்றின் முன்னுரையே ஆகும்.
பிரிட்டிஷாரின் பிடியிலிருந்த நாட்டை மீட்டு சுதந்திர உணர்வுடன் வாழ வேண்டும் என்று விரும்பிய பல ஆத்மாக்கள் முன்னெடுத்த விடுதலை போராட்டம்  வலிகளையும் கொடுமைகளையும் தன்னகத்தே புதைத்து கொண்டுள்ளது.
பல துயரங்களுக்கும் கொடுமைகளுக்கும் மத்தியில் கிடைக்கப் பெற்ற விடுதலையை (சுதந்திரம்) இன்று நாம் எளிமையாக கருதுகிறோம். அதன் விளைவே அவ்வப்போது எழுப்பப்படுகின்ற இன விவகாரங்கள் ஆகும்.

இன ரீதியில் பிரிந்து நின்றால் அது பலவீனம்; 'மலேசியராய்' நாம் ஒன்றிணைந்து நிற்பதுவே நமது பலம்.
சுதந்திர போராட்டத்தின் கறுப்பு அத்தியாயத்தை மறந்து விடாமல் முன்னோர்களின் தியாகத்தை என்றும் நினைவில் கொள்வோம்.  அதுவை நாம் அவர்களுக்கு செலுத்தும் மரியாதை.


No comments:

Post a Comment