Thursday 5 September 2019

கோத்தா கெமுனிங் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் கதை சொல்லும் போட்டியும் சுகந்திர தினக்கொண்டாட்டமும்

ஷா ஆலம்-
கோத்தா கெமுனிங் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலய ஏற்பாட்டில் கதை சொல்லும் போட்டியும் சுகந்திர தினக்கொண்டாட்டமும் விமரிசையாக நடந்தேறியது என்று ஆலய துணை செயலாளரும் இந்நிகழ்ச்சி ஏற்பாட்டு குழு தலைவருமாகிய முருகன் கிருஸ்ணமூர்த்தி தெரிவித்தார்.

முதன் முறையாக இப்பகுதியில் வசிக்கும் இந்து பக்தர்களின் பிள்ளைகளுக்கு என்று கதை சொல்லும் போட்டியை ஆலய நிர்வாகம் நடத்த திட்டமிட்டது காரணம் கதை சொல்லும் திறன் சிறு வயதினில் இருந்தே ஊக்கப்படுத்தினால்த்தான் கல்லூரி படிப்பை முடிந்த பிறகு தொழில் சார்ந்த நிருவனங்களுக்கு செல்லும் போது நேர்முக தேர்வின் போது இத்தகைய ஆற்றல்கள் பெரிய அளவில் கைக்கொடுக்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

சுங்கை ரெங்கம், எமரால்ட் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த சில மாணவர்களும் ஆலயத்திற்கு வரும் பக்தர்களின் பிள்ளைகளும் இந்த கதை சொல்லும் போட்டியில் கலந்துக்கொண்டு பல பரிசுக்களையும் தட்டி சென்றனர்.

ஆலயம் பல தொண்டூழியச் செயல்களில் அதிகம் ஈடுபட்டு வந்தாலும் நாளைய தலைமுறைகளுக்கான திறனை வளர்க்கும் காரியங்களிலும் அதிகம் கவனம் செலுத்துகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகையாளராக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரும் கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் கணபதி ராவ் கலந்துக்கொண்டு வெற்றிப்பெற்ற அனைத்து பிள்ளைகளுக்கும் பரிசுக்களையும் நற்சான்றிதல்களையும் எடுத்து வழங்கினார்.
அவருடன் ஆலய தலைவர் டத்தோ நாதன் சுப்பையா,சமூகச் சேவையாளர்கள்,ஆலய தொண்டூழிய படையினர்,பக்தர்கள் என்று பலரும் கலந்துக்கொண்டு நிகழ்ச்சியை விவர்சியாக நடத்திக்கொடுத்தனர்.

அதோடு,சுதந்திர  தினத்தை போற்றும் வகையில் அனைவரும் கொடி அசைத்து தேசிய கீதமும் பாடினர்.

No comments:

Post a Comment