Wednesday 4 September 2019

துணிகளை ஏற்றிச் சென்ற லோரி தீ பிடித்தது

ஈப்போ-

வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் துணிகளை ஏற்றிச் சென்ற லோரி ஒன்று தீபிடித்து எரிந்தது.

ஈப்போ நோக்கி செல்லும் மெனோரா சுரங்கத்திற்கு அருகில் நேற்று மாலை 7.35 மணியளவில் இச்சம்பவம் நிகழ்ந்தது. தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புப் படையினர் இரவு 10.45 மணியளவில் தீயை  முழுமையாக அணைத்தனர்.

தீ பிடித்த லோரி 80 விழுக்காடு எரிந்து நாசமானது.

இந்த சம்பவத்தினால் வடக்கு – தெற்கு நெடுஞ்சாலையில் வாகன் நெரிசல் ஏற்பட்டது.

No comments:

Post a Comment