Friday 6 September 2019

இனவாதத்தை தூண்டிவிட்டு குளிர்காய நினைப்பது அம்னோதான் - ஆனந்த் பதிலடி

ரா.தங்கமணி

ஷா ஆலம்-
நாட்டு மக்களிடையே இன பதற்றத்தை ஏற்படுத்தி அதில் குளிர் காய நினைப்பதி அம்னோவுக்கு நிகர் அம்னோ தான் என்று மலேசிய இந்தியர் குரல் இயக்கத்தின் பொதுச் செயலாளர் ஆனந்த் தெரிவித்தார்.

நாட்டின் 62ஆவது சுதந்திரம் தினக் கொண்டாட்ட குதூகலிப்பு அடங்குவதற்குள்ளேயே இன ரீதியிலான கருத்துகளை வெளியிட்டுள்ளார் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அஸ்ராஃப் வஜ்டி கூறியுள்ளார்.

அதிலும் மனிதவள அமைச்சர் எம்.குலசேகரன், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ், ஒற்றுமை துறை அமைச்சர் பொ.வேதமூர்த்தி உட்பட பல ஜசெக, பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மீது இன ரீதியிலான குற்றச்சாட்டுகளை முன்வைத்து மீண்டும் நாட்டு மக்களிடையே இன பதற்றத்தை உண்டாக்க முயல்கின்றார்.

60 ஆண்டுகால ஆட்சியை இழந்து அதிகாரம் கைவிட்டு போன நிலையில் பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மீது குற்றச்சாட்டை சுமத்தி வரும் அஸ்ராஃப் வஜ்டி, இனவாதத்தை தூண்டி விடுவது அம்னோதான் என்பதை உணர வேண்டும்.

இனவாதத்தை தூண்டி விட்டு அதில் குளிர் காய நினைப்பதில் அம்னோவுக்கு நிகர் அம்னோதான் என்பதை அஸ்ராஃப் வஜ்டி உணர்ந்து பேச வேண்டும் என்று ஆனந்த் வலியுறுத்தினார்.

No comments:

Post a Comment