Tuesday 13 July 2021

வறுமையில் வாடுவோருக்கான உதவித் திட்டங்கள் தொடரப்பட வேண்டும் - கோபி வலியுறுத்து

 

ரா.தங்கமணி

ஷா ஆலம்-

கோவிட்-19 பெருந்தொற்றால் வருமானம் இழந்து தவிக்கும் தரப்பினருக்கான உதவித் திட்டங்கள் தொடரப்பட வேண்டும் என்று சிலாங்கூர், அலாம் மெகா இந்திய சமூகத் தலைவர் மு.கோபி வலியுறுத்தினார்.

கோவிட்-19 பாதிப்பை கட்டுப்படுத்த நாட்டில் நடமாட்டக் கட்டுபாட்டு ஆணை அமல்படுத்தப்பட்ட நிலையில் பெரும்பாலானோர் தங்களது வேலையை இழந்து வருமானப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

அத்தகைய தரப்பினருக்கு நாடு முழுவதும் தற்போது உதவிப் பொருட்களை பல்வேறு தரப்பினர் வழங்கி வருகின்றனர். அதே போன்று கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் வீ.கணபதிராவின் ஏற்பாட்டில் உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

வேலை வாய்ப்பை இழந்துள்ள மக்களும் வருமான ரீதியில் பொருளாதார பின்னடைவை எதிர்நோக்கியுள்ள மக்களும் தங்களின் வாழ்வாதாரத்தை நிலைநிறுத்தி கொள்ளும் வரை உதவிப் பொருட்கள் வழங்கப்படுவது தொடரப்பட வேண்டும்.

எம்சிஓ 3.0 முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும் வேலை வாய்ப்பை இழந்தவர்களுக்கு உடனடியாக வேலை வாய்ப்பு கிடைக்கும்  என்பது கேள்விக்குறியே. அதனை கருத்தில் கொண்டு மக்களுக்கான உதவித் திட்டங்கள் தொடரப்படுவதை மத்திய, மாநில அரசுகளும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொது அமைப்புகளும் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று கோபி குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment