Monday 12 July 2021

5,600க்கும் அதிகமான உதவிப் பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன- கணபதிராவ்


ரா.தங்கமணி 

கோலாலம்பூர்-

கோவிட்-19 வைரஸ் தொற்று பரவலினால் அமலாக்கம் செய்யபட்டுள்ள எம்சிஓ 3.0 நடவடிக்கையினால் வருமானப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வருகிறது கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி. 

ஜூன் 1ஆம் தேதி முதல் இந்நாள் வரை இதுவரை 5, 600க்கும் அதிகமான உதவி பொட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன என்று கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வீ. கணபதிராவ் குறிப்பிட்டார். 


இன்றைய காலகட்டம் மக்களுக்கு சோதனையான காலகட்டம். பெரும்பாலானோர் வேலை,  வருமானம் இழந்து வாழ்வாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். 

இத்தகைய சூழலில் மக்களுக்கு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் உதவிப் பொட்டலங்கள் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் வழங்கப்படுகிறது.

சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் மட்டுமல்லாது கிராமத் தலைவர்கள், மாநகர் மன்ற உறுப்பினர்கள், இந்திய கிராமத் தலைவர்கள் என பலவேறு தரப்பினரும் இந்த உதவிகளை  வழங்கி வருகின்றனர் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான கணபதிராவ் சொன்னார். 

No comments:

Post a Comment