Sunday 3 March 2019

செமினி இடைத்தேர்தல் தோல்வி எதிரொலி; மக்கள் விடுத்திருக்கும் புதிய செய்தி?- பக்காத்தான் தலைவர்கள்

செமினி-
செமினி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அடைந்துள்ள தோல்வியானது மக்கள் விடுத்திருக்கும் 'புதிய தகவலாக' கருதுகிறோம் என்று அதன் தலைவர்கள் கூறியுள்ளனர்.

பெர்சத்து கட்சியின் உதவித் தலைவர் டத்தோஶ்ரீ முக்ரிஸ் மகாதீர், இந்த தோல்வியானது மக்கள் எங்களுக்கு விடுத்திருக்கும் புதிய தகவலாகவே கருதுகிறோம்.

எங்களது தோல்விகளையும், இயலாமையும் தவறுகளையும் திருத்திக் கொள்வதற்கான ஒரு களமாக இந்த தேர்தலில் மக்கள் எங்களை தண்டித்துள்ளனர்.

இனிவரும் காலங்களில் இந்த தவறுகளும் இயலாமையும் தோல்விகளும் திருத்தி கொள்ளப்படுவதற்கான வாய்ப்பாக இந்த தேர்தல் முடிவு அமைந்துள்ளது என்று கெடா மாநில மந்திரி பெசாருமான டத்தோஶ்ரீ முக்ரிஸ் குறிப்பிட்டார்.

அதோடு, பிகேஆர் கட்சியின் உதவித் தலைவர் தியான் சுவா கூறுகையில், செமினி இடைத்தேர்தல் தோல்வி பக்காத்தான் கூட்டணி மக்கள் புகட்டியுள்ள பாடமாக கருதப்படுகிறது.

பொதுத் தேர்தலின்போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததே இந்த தோல்விக்கான அடித்தள காரணம் ஆகும். நிச்சயமாக இது பக்காத்தான் கூட்டணிக்கு மக்கள் விடுத்திருக்கும் தொடக்க நிலை அறிவிப்பாகும்.

இத்தேர்தலின் தோல்வி குறித்து நிச்சயம் சுய பரிசோதனை மேற்கொள்ளப்படும். அப்போது நிச்சயம் மக்களின் எதிர்பார்ப்புகள் மீதான கருத்துகளும் கலந்தாய்வு செய்யப்படும் என்றார் அவர்.

No comments:

Post a Comment