Wednesday 6 March 2019

மார்ச் 7இல் திரையீடு காண்கிறது 'குற்றம் செய்யேல்' திரைப்படம்

கோலாலம்பூர்-
ஆஸ்ட்ரோ வானவில், சினி சத்திரியா நிறுவனம் தயாரிப்பில் நம் உள்ளூர், தமிழ்நாடு கலைஞர்களின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘குற்றம் செய்யேல்’ திரைப்படம் வரும் மார்ச் 7-ஆம் தேதி மலேசியாவிலுள்ள 50 திரையரங்களில் வெளியிடூ காணவுள்ளது. 

டாக்டர் செல்வமுத்து தயாரிப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இப்படத்தை தமிழக இயக்குநர் வெங்கடேஷ், மலேசிய இயக்குநர் பாரதிராஜா ஆகியோர் இணைந்து இயக்கியுள்ளனர்.

 ‘குற்றம் செய்யேல்’ திரைப்படம் குண்டர் கும்பல் பற்றிய ஒரு கதையாகும். கல்லூரி மாணவ இளைஞர்கள் சிலருக்கு அக்கல்லூரி நிர்வாகம் இரண்டு பிரிவுகளாக ஆய்வு வேலை ஒன்றை வழங்குகிறது. இதில் ஓர் இளைஞர் குழுவினர் குண்டர் கும்பல் குறித்து ஆய்வு நடத்த செல்கின்றனர். இந்நிலையில் மற்றொரு குழு  காவல்துறை குறித்து ஆய்வு நடத்துகின்றனர். இந்த சூழலில் உண்மையான காவல்துறை குண்டர் கும்பலையும் அதன் நடவடிக்கைகளையும் எப்படி கையாண்டு தீர்வு காண்கின்றது என்பதுதான் இத்திரைப்படத்தின் கதையாகும்.

இத்திரைப்படத்தில் தமிழக கலைஞர் மெட்டி ஒலி போஸ் வெங்கட், விஜித், கலக்க போவது யாரு தீனா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இவர்களுடன் தயாரிப்பாளர் டாக்டர் செல்வமுத்து, பாரதிராஜா, ஷான், சாம், சாரதி, பிரேம், ரவி, நத்ராஜன் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

60 நாட்களில் முழுக்க முழுக்க மலேசியாவில் படமாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தை இந்திய மட்டுமின்றி நம் நாட்டைச் சேர்ந்த உள்ளூர் படக்குழு இணைந்து பணியாற்றியுள்ளார்கள். அதை வேளையில், இத்திரைப்படத்தில் அர்வின் ராஜ் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார். மொத்தம் 3 பாடல்களைக் கொண்ட இத்திரைப்படத்தில் பிபரல பின்னணிப் பாடகர் கானா பாலா பாடியுள்ளார். இத்திரைப்படத்தின் இசை, டிரெய்லர் வெளியிட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது.

குற்றம் செய்யேல்’ திரைப்படம் குறித்த மேல் விவரங்களுக்கு ஆஸ்ட்ரோ உலகத்தின் அதிகாரப்பூர்வ அகப்பக்கமான www.astroulagam.com.my அல்லது www.facebook.com/AstroUlagam முகநூல் அகப்பக்கத்தை நாடுங்கள். 

No comments:

Post a Comment