Saturday 16 March 2019

பேரா ஊடகவியலாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் எல்லை கடந்த மனிதநேய நடவடிக்கை

எஸ்.லிங்கேஸ்வரன்

ஈப்போ, மார்ச் 15-
மனிதநேயத்தை நிலைநாட்டுவதற்கு எல்லைக்கோடு தேவையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் ஈப்போ மாநகர் மன்றமும் பேரா மாநில ஊடகவியலாளர் சமூகநல, விளையாட்டு மன்றமும் இணைந்து லங்காவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் சமூகநல நடவடிக்கையை மேற்கொண்டனர்.

பெருநிறுவனங்களின் சமூகக் கடப்பாடு (சிஎஸ்ஆர்) திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த திட்டத்தின் ஒரு நடவடிக்கையாக லங்காவிக்கு பயணம் மேற்கொண்ட ஈப்போ மாநகர் மன்றத்தினருடன் பேரா மாநில ஊடகவியலாளர்களும் பங்கு பெற்றனர்.

இது குறித்து கருத்துரைத்த ஈப்போ மாநகர் மன்றத்தின் பொது உறவு அதிகாரி முகமட் ஷரிஸால் அஸ்மி, இருவழி உறவை மேம்படுத்திக் கொள்ளும் அதே வேளையில்  நோர் காசே ஆதரவற்ற சிறார்களுக்கு உதவிடும் நோக்கில் சில நடவடிக்கைகள் முன்னெடுக்க்கப்பட்டன.

அதன் அடிப்படையில் ஆதரவற்ற சிறார்களுடன் பொழுதை கழித்தோடு அவர்களுக்கான உணவும் அம்மையத்திற்கு நன்கொடையும் வழங்கப்பட்டது.

சிஎஸ்ஆர் நடவடிக்கையின் வழி எல்லை கடந்த மனிதநேயத்தை ஊக்குவிப்பதோடு அந்த மனிதநேயத்தை ஊடகவியலாளர்கள் நிறைவேற்றும் வகையில் திட்டம் வகுக்கப்பட்டு மேற்கொள்ளப்படுகிறது என்று மன்றத்தின் தலைவர் ரோஸ்லி மன்சோர் குறிப்பிட்டார்.

இந்த திட்டம் வெற்றிகரமாக நிறைவேற ஒத்துழைப்பு வழங்கிய ஈப்போ மாநகர் மன்றத்தினர் உட்பட அனைத்துத் தரப்பினருக்கும் நன்றி கூறி கொள்வதாக அவர் சொன்னார்.

இந்த நிகழ்வில் பேரா மாநிலத்தில் செயல்படும் பல்வேறு ஊடக நிறுவனங்களைச் சேர்ந்த நிருபர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment