Wednesday 6 March 2019

அஸ்மினின் கூற்று தனிபட்ட கருத்தாகும்- டத்தோஶ்ரீ அன்வார்

கோலாலம்பூர்-

பூமிபுத்ராவினருக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும் என்ற பொருளாதார விவகார அமைச்சர் டத்தோஶ்ரீ அஸ்மின் அலியின் கூற்று அவரது தனிபட்ட கருத்தாகும் என்று பிகேஆர் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி ஒருபோதும் இனவாத கொள்கையை பின்பற்றாது. உதவிகள் தேவைபடும் அனைத்து மக்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்.

அது அவரின் தனிபட்ட கருத்து. பூமிபுத்ராவினரின் தேவைகளை பக்காத்தான் ஹராப்பான் ஒதுக்கி வைக்காது. அதே வேளையில் இன ரீதியிலான கொள்கைகளை காட்டிலும் மக்களின் கொள்கைகளே முன்னிறுத்தப்படும். மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் இன ரிதியிலான அம்சங்களை நெருங்க மாட்டோம் என்று அவர் சொன்னார்.

செமினி இடைத் தேர்தலின்போது பக்காத்தான் ஹராப்பான் அடைந்த தோல்வியை அடுத்து பூமிபுத்ராவினருக்கான வாக்குறுதிகள் பாரபட்சமின்றி நிறைவேற்றப்படும் என்று அஸ்மின் அலி கருத்து தெரிவித்திருந்தார்.


No comments:

Post a Comment