Tuesday 16 February 2021

இரு ஆலயங்களுக்கு மானியம் வழங்கியது எம்ஆர்சிபி ஜிகே நிறுவனம்

 ரா.தங்கமணி

ஷா ஆலம்-

கிள்ளானில் மேற்கொள்ளப்பட்டு வரும் மின்சார ரயில் திட்ட (எல்ஆர்டி) கட்டுமானப் பணியினால் பாதிப்பை எதிர்நோக்கிய இரு ஆலயங்களுக்கு எம்ஆர்சிபி ஜிகே (MRCB GK) நிறுவனம் மானயங்களை வழங்கியது.

கடந்த மூன்றாண்டுகளுக்குமுன்பு மேற்கொள்ளப்பட்ட எல்ஆர்டி கட்டுமானத் திட்டத்தினால் கிள்ளான், மேரு சித்தி விநாயகர் ஆலயம், கிள்ளான், ஸ்ரீ அண்டலாஸ் தேவி ஸ்ரீ மகா கருமாரியம்மன் ஆலயம் ஆகியவை பாதிப்பை எதிர்நோக்கின.

இந்த கட்டுமானத் திட்டத்தினால் ஆலயத்திற்கும் பக்தர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வண்ணம் மறுசீரமைப்பு மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகங்கள் முன்வந்ததன் விளைவாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எம்ஆர்சிபி ஜிகே நிறுவனம் குறிப்பிட்ட தொகையை வழங்க முன்வந்தது என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.கணபதிராவ் குறிப்பிட்டார்.

வழங்கப்பட்ட தொகையில் கருமாரியம்மன் ஆலயம் சமயலறையை இடமாற்றம் செய்வதோடு சித்தி விநாயகர் ஆலயம் சில மாற்றங்களை செய்யவும் இந்த தொகை வழங்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட இரு ஆலயங்களுக்கும் கணபதிராவ் முன்னிலையில் எம்ஆர்சிபி ஜிகே நிறுவன அதிகாரிகள் காசோலேயை வழங்கினர்.

கடந்த மூன்றாண்டுகளாக நீடித்து வந்த ஆலயப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கண்ட கணபதிராவுக்கு ஆலயத் தலைவர்கள் ராமசந்திரன், மு.ஆறுமுகம் ஆகியோர் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

பாதிக்கப்பட்ட ஆலங்களுக்கு தொகையை வழங்கி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிய எம்ஆர்சிபி ஜிகே நிறுவனத்திற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக கணபதிராவ் மேலும் சொன்னார்.

No comments:

Post a Comment