Saturday 26 December 2020

MIED: 15,000 மாணவர்களுக்கு வெ.163 மில்லியன் கல்வி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது- டத்தோஶ்ரீ சரவணன்

 கோலாலம்பூர்-

மஇகாவின் கல்விக் கழகமான எம்.ஐ.இ.டி.  (MIED) மூலம் இதுவரை 163 மில்லியன் வெள்ளி இந்திய சமுதாய மாணவர்களுக்கு கல்வி கடனுதவியாக வழங்கப்பட்டுள்ளது என்று மனிதவள அமைச்சர் டத்தோஶ்ரீ எம்.சரவணன் தெரிவித்தார்.

இந்திய சமுதாயம் அரசியல், பொருளாதாரம் ஆகியவற்றில் பலவீனமாக உள்ள நிலையில் கல்வி ஒன்றே இந்திய சமுதாயத்தின் பலம் என்பதை உணர்ந்து 1984இல் தொடங்கப்பட்ட எம்.ஐ.இ.டி. மூலம் இதுவரை 15,000 இந்திய மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

கோவிட்-19 பாதிப்பு காரணமாக பல நிறுவனங்கள், அமைப்புகள் கல்வி உதவிநிதி கொடுப்பதை நிறுத்திக் கொண்டாலும் டான்ஶ்ரீ எஸ்.ஏ.விக்னேஸ்வரன் தலைமையிலான மஇகா கடந்த ஈராண்டுகளை காட்டிலும் இம்முறை அதிகமான கல்வி நிதியை வழங்கியுள்ளது என்று  மஇகாவின் துணைத் தலைவர் டத்தோ சரவணன் கூறினார்.

இன்று நடைபெற்ற எம்ஐஇடி கடனுதவி காசோலைகள் வழங்கும் நிகழ்வில் 301 மாணவர்களுக்கு 5.8 மில்லியன் வெள்ளி வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment